Skip to main content

கேரள கன்னியாஸ்திரிக்கு புனிதர் பட்டத்தை வழங்குகிறார் போப் பிரான்சிஸ்!

Published on 13/10/2019 | Edited on 13/10/2019

வாடிகனில் இன்று (13/10/2019) நடைபெறும் நிகழ்ச்சியில் போப் பிரான்சிஸ், கேரள மாநிலத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி மரியாவுக்கு புனித பட்டம் வழங்குகிறார். 
 

கேரள மாநிலம் திருச்சூரில் 1876 ஆம் ஆண்டு பிறந்தவர் மரியம் திரேசியா. கன்னியாஸ்திரியான, இவர் 1914- ஆம் ஆண்டு புனித குடும்பத்தின் சகோதரிகள் என்ற பெயரில் சபை ஒன்றை நிறுவினார் இதன் மூலம் ஏழை எளியோருக்கு தொடர்ந்து உதவிகளை செய்து வந்தார். தொடர்ந்து சமூகப்பணியாற்றி வந்த மரியம் திரேசியா, கடந்த 1926- ஆம் ஆண்டு மரணமடைந்தார். 
 

VATICAN CITY POP FRANCIS KERALA WOMEN THERESIYA


கடந்த 2000ம் ஆண்டு அப்போதைய போப் 2ம் ஜான்பால் முக்திப் பேறு அடைந்தவர் என்ற பட்டத்தை மரியாவுக்கு வழங்கினார். அதை தொடர்ந்து இன்று வாடிகனில் நடைபெறும் நிகழ்ச்சியில் மரியம் திரேசியாவை புனிதராக போப் பிரான்சிஸ் அறிவிக்க உள்ளார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளிதரன் தலைமையிலான குழு வாடிகன் சென்றுள்ளது. 



 

சார்ந்த செய்திகள்