/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/varava rao.jpg)
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
இடதுசாரி ஆதரவாளர் கவிஞர் வரவரா ராவ், ஆகஸ்ட் 28 ஆம் தேதி ஹைதிராபாத்தில் மஹாராஷ்டிரா போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அன்று மட்டுமே 5 இடதுசாரி ஆதரவாளர்களை கைது செய்தது மஹாராஷ்டிரா போலீஸ். இவர்கள் மேல், பிரதமர் மோடியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய வழக்கு, மாவோயிடுகளுடன் தொடர்பு, கோரேகான் கலவரம் என்று அடுக்கடுக்கான வழக்குகளில் கைது செய்தது. கைது செய்தப்பட்டவர்களுக்கு ஆதரவாக, உச்சநீதி மன்றத்தில் அவசர விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று மனு கொடுக்கப்பட்டது. அந்த விசாரணையில், இவ்வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் செப்டம்பர் 5 வரை வீட்டுக்கவாளில் வைக்க உத்தரவிட்டது, உச்சநீதி மன்றம்.
style="display:inline-block;width:336px;height:280px" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="3041061810">
இந்நிலையில், கவிஞர் வரவரா ராவ் ஹைதிராபாத்தில் இருக்கும் அவருடைய வீட்டுக்கு அழைத்துவரப்பட்டார். அப்போது அவர் கூறியதாவது: "நான் தொடக்கத்திலிருந்தே சொல்கிறேன். தவறான கூற்றுகளின் அடிப்படையில், என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனக்கு சட்டத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது" என்றார்.
Follow Us