மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் தபாலை வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
இதில் இந்தியா முழுவதும் தேர்தல் நடந்த 542 மக்களவை தொகுதியில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் வாரணாசி தொகுதியில் போட்டியிடும் மோடி இதுவரை 30000 வாக்குகள் பெற்று சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் ஷாலினி யாதவை விட 15,000 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.