Advertisment

கூகுள் மேப்பை நம்பி மலை உச்சியில் சிக்கிக் கொண்ட ஓட்டுநர்!

கூகுள் மேப் காட்டிய பாதையில் சென்ற டிரைவர் மலை உச்சியில் சிக்கிக்கொண்ட சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியை சேர்ந்த 10க்கும் மேற்பட்டவர்கள் அங்குள்ள மலைகொண்டை சுற்றுலா தளத்துக்கு சுற்றுலா சென்றுள்ளனர். வாகனத்தில் வந்தவர்களை தங்கும் விடுதியில் இறக்கிய ஓட்டுவர், சாப்பாடு வாங்குவதற்காக கூகுள் மேப் உதவியுடன் வண்டியை ஹோட்டல் உள்ள இடத்திற்கு இயக்கியுள்ளார்.

Advertisment

மேப் காண்பித்த வழிதடத்தின் வழியாக சென்ற அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஒரு குறுகலான மலை உச்சியில் அவரின் வாகனம் சிக்கி கொண்டது. வாகனத்தை பின்னால் எடுக்கவும் முடியாததால், தன்னோடு வந்தவர்களுக்கு தகவல் கொடுத்தார். பிறகு அங்கு வந்த மீட்புப்படையினர் அவரை மீட்டனர். கூகுள் மேப் பொய் சொல்லாது என்று நினைத்து இவ்வாறு வந்து சிக்கிக்கொண்டேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Advertisment
accident
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe