Skip to main content

தவறான பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய கூலித்தொழிலாளிகள்... ஏழு பேரின் உயிரைப்பறித்த கொடூர விபத்து...

Published on 16/11/2020 | Edited on 16/11/2020

 

van accident in himachal pradesh

 

 

அதிகாலை மூன்று மணியளவில் எட்டு பேருடன் சென்ற வேன் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து நீரோடைக்குள் விழுந்ததில் அதில் பயணம் செய்த ஏழு பேர் உயிரிழந்த சம்பவம் இமாச்சலப்பிரதேசம் மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

பீகார் மாநிலத்தை சேர்ந்த எட்டு கூலி தொழிலாளர்களுடன் வேன் ஒன்று இமாச்சலப்பிரதேசம் மாநிலத்தின் மண்டி மாவட்டத்தின் புல்கிரத் பகுதியில் பயணித்துள்ளது. அப்போது, அதிகாலை 3 மணியளவில் சுகேதி காட் நீரோடையை வாகனம் கடக்கையில் கட்டுப்பாட்டை இழந்து பாலத்திலிருந்து நீரோடைக்குள் விழுந்துள்ளது. இதில் அந்த வேனில் பயணம் செய்த ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அம்மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள சூழலில், இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீஸார், "கட்டிட தொழிலாளிகளான இவர்கள் ஹரியானா ரோட்வேஸ் பேருந்தில் மண்டிக்கு வந்துள்ளனர். அப்போது இவர்கள் அனைவரும் தங்கள் இறங்கவேண்டிய பேருந்து நிறுத்தத்தை தவறவிட்டுள்ளனர். தவறான பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய இவர்களை கட்டிட ஒப்பந்ததாரர் வேன் மூலம் பணி நடைபெறும் இடத்திற்கு அழைத்து வந்துள்ளார். அப்போதே இந்த விபத்து நடந்துள்ளது" எனக் கூறியுள்ளனர்.

 

இந்நிலையில், இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "இமாச்சல பிரதேசத்தின் மண்டியில் ஏற்பட்ட சாலை விபத்து பற்றிய செய்தி மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டுள்ளது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சாலை விபத்து; பரிதாபமாகப் பிரிந்த உயிர்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Hotel worker passed away in road accident near Modakurichi

ஈரோடு, என்.ஜி.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் சரவணன் (48). திருமணமாகவில்லை. இவரது பெற்றோர் கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டனர். கரூர் ரோட்டில், சோலார் அருகே உள்ள ஓட்டல் ஒன்றில் சரவணன் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று முன் தினம் இரவு சரவணன், தான் வேலை பார்க்கும் ஓட்டலுக்கு சொந்தமான பைக்கை எடுத்துக் கொண்டு, கரூர் ரோட்டில் உள்ள பரிசல் துறை நால்ரோட்டில் இருந்து, கொக்கராயன் பேட்டை நோக்கி சென்றுள்ளார். அப்போது, காவிரி பாலத்துக்கு முன்பாக, எதிரில் வந்த ஸ்கூட்டர் எதிரிபாரதவிதமாக சரவணன் ஓட்டிச் சென்ற பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதையடுத்து, அங்கிருந்தவர்கள், சரவணனை மீட்டு, ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சரவணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

Next Story

பாஜகவில் இணைந்த பிரியங்கா காந்தியின் ஆதரவாளர்!

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Supporter of Priyanka Gandhi who joined BJP

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பிரியங்காவின் நெருங்கிய ஆதரவாளர் தஜிந்தர் சிங் பிட்டு பாஜகவில் இணைந்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய சில மணி நேரங்களிலேயே இவர் பாஜவில் இணைந்துள்ளார். ஹிமாச்சல பிரதேச காங்கிரஸ் கட்சியின் செயலாளராக பதவி வகித்து வந்த தஜிந்தர் சிங் நேற்று (20.04.2024) தனது ராஜினாமா கடிதத்தை அக்கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் அளித்தார். அதனைத் தொடர்ந்து ராஜினாமா செய்த சில மணி நேரங்களிலேயே டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மற்றும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வினோத் தவுத்டே முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

பாஜகவில் இணைந்தது குறித்து தஜிந்தர் சிங் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், “கடந்த 35 வருடங்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்தேன். இன்று அக்கட்சியில் இருந்து விலகிவிட்டேன். யாருக்கு எதிராகவும் நான் பேச விரும்பவில்லை. மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக, நான் பாஜகவில் இணைந்துள்ளேன்” எனத் தெரிவித்தார்.