Skip to main content

தடுப்பூசி கொள்கையில் திடீர் மாற்றம் ஏன்? - நிதி ஆயோக் விளக்கம்!

Published on 08/06/2021 | Edited on 08/06/2021

 

dr vk paul

 

இந்தியப் பிரதமர் மோடி, நேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, தடுப்பூசி கொள்கையில் சில முக்கிய மாற்றங்களை அறிவித்தார். இதனைத்தொடர்ந்து மத்திய அரசு தனது தடுப்பூசி கொள்கையில் அந்த மாற்றங்களைச் செய்து இன்று வெளியிட்டது. அப்போது, நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே பால், செய்தியாளர்களைச் சந்தித்து, கரோனா தடுப்பூசிகள் தொடர்பான பல்வேறு விஷயங்கள் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தார்.

 

கரோனா தடுப்பூசிகள் தொடர்பாகப் பேசிய வி.கே.பால், "தனியார்களுக்கு (மருத்துவமனைகளுக்கு) தடுப்பூசிகளின் விலை தடுப்பூசி உற்பத்தியாளர்களால் தீர்மானிக்கப்படும். தனியார்களின் தேவையை மாநிலங்கள் ஒருங்கிணைத்துச் செயலாற்றும். 25 கோடி டோஸ் கோவிஷீல்ட் மற்றும் 19 கோடி டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு அரசு ஆர்டர் அளித்துள்ளது. மேலும், பயோலொஜிக்கல் ஈ நிறுவனத்திடமிருந்து அரசு 30 கோடி தடுப்பூசிகளை வாங்க ஆர்டர் அளித்துள்ளது. அவை செப்டம்பரிலிருந்து கிடைக்கும்" என்றார்.

 

பயோலொஜிக்கல் ஈ தடுப்பூசியின் விலை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "நிறுவனம் தடுப்பூசியின் விலையை அறிவிக்கும் வரை நாம் காத்திருக்கவேண்டும். புதிய கொள்கையின் அடிப்படையில் நிறுவனத்துடன் நாங்கள் நடத்தும் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் அது முடிவாகும். ஏற்கனவே அந்நிறுவனத்திற்கு அளிக்கப்பட்ட நிதியுதவி, மத்திய அரசு கொடுக்கப்போகும் விலையின் ஒரு பகுதியாக இருக்கும். பயோலொஜிக்கல் ஈ நிறுவன தடுப்பூசியின் இடைக்கால சோதனை தரவுகள் நம்பிக்கையளிக்கும் வகையில் உள்ளன" எனத் தெரிவித்தார்.

 

அண்மையில் உச்சநீதிமன்றம், மத்திய அரசே தடுப்பூசிகளை வாங்கி மாநிலங்களுக்கு வழங்கவேண்டும் என அறிவுறுத்தியதோடு, மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட 35,000 கோடியை வைத்து 18 முதல் 44 வயதானோருக்கு ஏன் தடுப்பூசியை இலவசமாக வழங்கமுடியாது எனவும் கேள்வியெழுப்பியிருந்தது.  உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவால்தான் மத்திய அரசே மொத்தமாகத் தடுப்பூசிகளை வாங்கி மாநிலங்களுக்கு இலவசமாகத் தர முன்வந்துள்ளதா என கேள்வியெழுப்பட்டது.

 

இதற்கு பதிலளித்த வி.கே.பால், "உச்சநீதிமன்றத்தின் கவலையை நாங்கள் மதிக்கிறோம். ஆனால் மே 1 முதல் இந்த பரவலாக்கப்பட்ட மாதிரியைச் செயல்படுத்துவது குறித்து இந்திய அரசு மதிப்பீடு செய்து வந்தது. இதுபோன்ற முடிவுகள் பகுப்பாய்வு மற்றும் ஆலோசனைகளின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் எடுக்கப்படுகின்றன" எனத் தெரிவித்தார். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

மின்னணு வாக்குப்பதிவு குறித்த புகார்; உச்ச நீதிமன்றம் அதிரடி!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Complaint about electronic voting; The Supreme Court is in action

தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் ஒப்புகை சீட்டையும் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ‘ஒப்புகைச் சீட்டு இயந்திரம் கடந்த 2017 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அதில் வெளிப்படையாக தெரியும் கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்த ஒப்புகை சீட்டு உள்ளே விழுகிறதா? என்பது கூட வாக்காளர்களுக்கு தெரியவில்லை. ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும் உள்ள ஒரு சட்டப்பேரவை தொகுதியில் ஏதாவது 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளுடன் ஒப்புகை சீட்டு சரிபார்க்கப்படுகிறது. இது வெறும் இரண்டு சதவீதம் மட்டுமே சரி பார்ப்பாகும். இதிலும் முறைகேடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இதனைத் தடுக்க மின்னணு வாக்குப்பதிவை மக்கள் நம்பாத பட்சத்தில் ஒப்புகை சீட்டுகளை அதனுடன் ஒப்பிட்டு எண்ணிக்கை நடத்த வேண்டும்’ என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘இந்தியாவில் வாக்காளர்களின் எண்ணிக்கை 1960ல் 50 லிருந்து  60 கோடிகளில் தான் இருந்தது. ஆனால் தற்பொழுது 97 கோடிக்கு மேல் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் இருக்கிறார்கள். இவர்களில் சராசரியாக 65 சதவீதம் பேர் வாக்களிக்கிறார்கள், என்றால் கூட அத்தனை வாக்குகளையும் ஒப்புகை சீட்டுகளையும் எப்படி, எப்போது எண்ணி முடிப்பது? இத்தனை கோடி வாக்கு ஒப்புகை சீட்டுகளை எண்ணி முடிக்க 12 நாட்கள் ஆகும் எனத் தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளது என நீதிபதிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மனுதாரர் தரப்பில், ‘மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை எந்த விதத்திலும் தவறாக பயன்படுத்த முடியாது எனத் தேர்தல் ஆணையம் தெரிவிக்கிறது. இதுவரை தவறாக பயன்படுத்தப்படுவதில்லை என்றும் கூறுகிறது. ஆனால் எதிர்காலத்திலும் இவ்வாறு நடக்காது என்று  சொல்ல முடியாது எனவே. 100% ஒப்புகை சீட்டுகளை சரி பார்ப்பதற்கு உத்தரவிட வேண்டும்’ என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு இரண்டாவது முறையாக இன்று (18.04.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆஜரானார். அவர் அப்போது வாதிடுகையில், “கேரளா மாநிலம் காசர்கோடு சட்டமன்ற தொகுதியில் நடந்த மாதிரி வாக்குப்பதிவில் ஒரு முறை வாக்குப்பதிவு இயந்திரத்தின் பொத்தானை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஓட்டுகள் விழுவதாக காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். இதனையடுத்து இது குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தை பற்றி பல்வேறு கேள்விகளையும் நீதிபதி எழுப்பியுள்ளனர். 

Next Story

'என்னாது எண்ணி முடிக்க இவ்வளவு நாள் ஆகுமா?' -நீதிமன்றம் சொன்ன பதில்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் ஒப்புகை சீட்டையும் எண்ண வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், இன்று வழக்கு விசாரணை நடைபெற்றது. ஒப்புகைச் சீட்டு இயந்திரம் கடந்த 2017 ஆம் ஆண்டு இறுதி வருடத்திற்கு கொண்டு வந்த பொழுது, அதில் வெளிப்படையாக தெரியும் கண்ணாடி பொருத்தப்படுகிறது. ஆனால் அந்த ஒப்புகை சீட்டு உள்ளே விழுகிறதா? என்பது கூட வாக்காளர்களுக்கு தெரியவில்லை. ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும் உள்ள ஒரு சட்டப்பேரவை தொகுதியில் ஏதாவது 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளுடன் ஒப்புகை சீட்டு சரிபார்க்கப்படுகிறது. இது வெறும் இரண்டு சதவீதம் மட்டுமே சரி பார்ப்பாகும். இதிலும் முறைகேடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இதனைத் தடுக்க மின்னணு வாக்குப்பதிவை மக்கள் நம்பாத பட்சத்தில் ஒப்புகை சீட்டுகளை அதனுடன் ஒப்பிட்டு எண்ணிக்கை நடத்த வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிக்கப்பட்டது.

nn

இதைக் கேட்டுக்கொண்ட நீதிபதிகள், 'இந்தியாவில் வாக்காளர்களின் எண்ணிக்கை 1960ல் 50 லிருந்து  60 என்ற தொகுதிகளில் தான் இருந்தது. ஆனால் தற்பொழுது 97 கோடிக்கு மேல் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் இருக்கிறார்கள். இவர்களில் சராசரியாக 65 சதவீதம் பேர் வாக்களிக்கிறார்கள், என்றால் கூட அத்தனை வாக்குகளையும் ஒப்புகை சீட்டுகளையும் எப்படி, எப்போது எண்ணி முடிப்பது? இத்தனை கோடி வாக்கு ஒப்புகை சீட்டுகளை எண்ணி முடிக்க 12நாட்கள் ஆகும் எனத் தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளது' என நீதிபதிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுதாரர் தரப்பில், 'மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை எந்த விதத்திலும் தவறாக பயன்படுத்த முடியாது எனத் தேர்தல் ஆணையம் தெரிவிக்கிறது. இதுவரை தவறாக பயன்படுத்தப்படுவதில்லை என்றும் கூறுகிறது. ஆனால் எதிர்காலத்திலும் இவ்வாறு நடக்காது என்று  சொல்ல முடியாது எனவே. 100% ஒப்புகை சீட்டுகளை சரி பார்ப்பதற்கு உத்தரவிட வேண்டும்' என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.