ரோந்துப் பணியின் போது பால் பாக்கெட் திருடிய போலீஸ்... வைரலாகும் சிசிடிவி காட்சிகள்...

காவலர் ஒருவர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருக்கும் போது, கடை ஒன்றின் வாசலில் வைக்கப்பட்டிருந்த பால் பாக்கெட்டை எடுத்துச்செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

uttarpradesh police picks milk packets during rounds

உத்தரபிரதேச மாநிலம், நொய்டாவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர் கடையின் வாசலில் இருந்த பால் பாக்கெட்டுகளை திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. உத்தரப் பிரதேசத்தின் நொய்டா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சோதனை சாவடி அருகே பால் விற்பனை மையம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இரவு நேர காவலர்கள், பால் விற்பனை மையத்தின் வெளியில் வைக்கப்பட்டிருந்த பால் பாக்கெட்டுகளை எடுத்து சென்றுள்ளனர். அதன் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

police uttarpradesh
இதையும் படியுங்கள்
Subscribe