Skip to main content

"சிறுநீரைக் குடிக்கக் கட்டாயப்படுத்தினார்" - கதறும் முதியவர்... புகாரை திரும்பப் பெறாததால் ஆத்திரம்...

Published on 13/10/2020 | Edited on 13/10/2020

 

uttarpradesh oldman hit by a man

 

65 வயது முதியவர் ஒருவரைச் சிறுநீரைக் குடிக்கக்கூறி ஒருவர் மிரட்டிய சம்பவம் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நடந்துள்ளது. 

 

உத்தரப்பிரதேசம் மாநிலம் லலித்பூரில் உள்ள ரோடா கிராமத்தைச் சேர்ந்த அமர் என்ற முதியவரின் மகனை சோனு யாதவ் என்ற நபர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கோடரியால் தாக்கியுள்ளார். இதுதொடர்பாக அமர் மற்றும் அவரது மகன் லலித்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில், புகாரை திரும்பப் பெறக்கோரி சோனு யாதவ், அமர் மற்றும் அவரது மகனை மிரட்டியுள்ளார். அப்போது, தனது சிறுநீரைக் குடிக்கும்படி முதியவர் அமரை மிரட்டியுள்ளார் சோனு யாதவ். 

 

இதுகுறித்து கண்ணீருடன் பேசியுள்ள முதியவர், "சோனு யாதவ் என்ற நபர் ஒரு கோப்பையில் நிரப்பப்பட்ட அவரது சிறுநீரைக் குடிக்க என்னைக் கட்டாயப்படுத்தினார். நான் மறுத்தபோது, அவர் என்னைத் தாக்கினார். அவர் சில நாட்களுக்கு முன்பு என் மகனைக் கோடரியால் தாக்கியிருந்தார், நாங்கள் அவருக்கு எதிராகப் காவல்துறையில் புகார் செய்தோம். எனவே அவர் எங்களை புகாரை திரும்பப்பெறும்படி கட்டாயப்படுத்தினார்" எனத் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சோனு யாதவ் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

 

இந்தச் சம்பவம் குறித்துப் பேசியுள்ள லலித்பூர் எஸ்.பி மிர்சா மன்சார் பேக், "ரோடா கிராமத்தில் செல்வாக்கு மிக்க இருவர், இரண்டு பேரைத் தாக்கியுள்ளனர். தகவல் கிடைத்தவுடன் போலீஸார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தனர். பிரதான குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார் மற்றும் இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்களுக்காகத் தேடல் நடைபெற்று வருகிறது. எந்தவிதமான கொடுமைப்படுத்துதலையும் நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம்" எனத் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் சாதிய ரீதியான ஒடுக்குதல்கள் அதிகரித்துவரும் சூழலில், அதேபோன்றதொரு சம்பவம் தற்போது மீண்டும் நடந்திருப்பது அரசியல் மற்றும் நிர்வாக ரீதியிலான பல்வேறு கேள்விகளை அம்மாநில அரசு மீது எழுப்பியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

லிப்ட் கேட்ட சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Incident happened on The girl who asked for a lift

உத்தரப்பிரதேச மாநிலம், மொரதாபாத் பகுதியைச் சேர்ந்தவர் 18 வயதுக்குட்பட்ட சிறுமி. இந்த நிலையில், அவர் வசித்து வந்த பகுதிக்கு அடுத்த பகுதியான காசியாபாத் பகுதியில் சில நாட்களுக்கு முன் திருவிழா நடைபெற்றுள்ளது. அந்த திருவிழாவின் ஒரு பகுதியாக கலை நிகழ்ச்சியும் நடைபெற்றுள்ளது.

அந்த கலை நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக அந்த சிறுமி அங்கு சென்றுள்ளார். நிகழ்ச்சி முடிந்த பின்னர் சிறுமி, வீடு திரும்பியபோது, அந்த வழியாக வந்த காரை மறித்து லிப்ட் கேட்டுள்ளார். இதையடுத்து, காரில் இருந்த மர்ம நபர்கள் அந்த சிறுமிக்கு லிப்ட் கொடுத்து காரில் ஏற்றிச் சென்றுள்ளனர். சிறிது தூரம் கழித்து, அந்த மர்ம நபர்கள் அந்த சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து, அருகில் உள்ள ஹோட்டலுக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சென்ற அவர்கள், அந்த சிறுமியை கொடூரமாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி தனது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் குடும்பத்தினர், இந்த சம்பவம் குறித்து கோட்வாலி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகள் குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையின் அடிப்படையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பாரத் சிங், அனில் மற்றும் சோனு ஆகிய 3 பேர் மீதும் போக்சோ உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். லிப்ட் கேட்ட சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.