Skip to main content

1000 ரூபாய்காக ஆறு வயது சிறுமியை கொன்று நுரையீரலை எடுத்த நபர்கள்...

Published on 17/11/2020 | Edited on 17/11/2020

 

uttarpradesh girl found in woods without lung

 

உத்தரப்பிரதேசத்தில் 6 வயது சிறுமியை கொலை செய்து நுரையீரலை வெட்டி எடுத்த கொடூரச் சம்பவம் நடைபெற்றுள்ளது. 

 

உத்தரப்பிரதேசத்தின் கான்பூர் அருகே உள்ள கிராமத்தில் பரசுராம் மற்றும் அவரது மனைவி வசித்து வருகின்றனர். கடந்த 1999 ஆம் ஆண்டு திருமணமான இவர்களுக்கு இதுவரை குழந்தை இல்லாமல் இருந்துள்ளது. எனவே, பெண்குழந்தை ஒன்றின் நுரையீரலை வைத்து பூஜைகள் செய்தால் குழந்தை பிறக்கும் என ஒருவர் கூறியதை நம்பி, அப்பகுதியில் வசிக்கும் பெண் குழந்தை ஒன்றை இவர்கள் நுரையீரலுக்காக கொன்றுள்ளனர். 

 

அப்பகுதியில் வசிக்கும் அன்குல் மற்றும் பீரான் என்பவர்களிடம் ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து, சிறுமி ஒருவரின் நுரையீரலை கொண்டுவரும்படி கூறியுள்ளனர். அவர்கள் இருவரும் தீபாவளியன்று இரவு அப்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி ஒருவரை கடத்தி சென்று, சிறுமியைக் கொன்று நுரையீரலை எடுத்துள்ளனர். நேற்று வனப் பகுதியிலிருந்து கொலை செய்யப்பட்ட 6 வயது சிறுமியின் உடலை காவல்துறையினர் கண்டெடுத்தனர்.  இதன்பிறகு நடந்த விசாரணையில் அன்குல் மற்றும் பீரான் கைது செய்யப்பட்டனர். அவர்களின் வாக்குமூலத்தின்படி, குழந்தையின் நுரையீரலுக்கு பணம் கொடுத்த பரசுராம் மற்றும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

 

இதுதொடர்பாக பேசிய மாவட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் ப்ரஜேஷ் ஸ்ரீவட்சவா, ‘குடிபோதையில், முதலில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய அன்குல் மற்றும் பீரான் முயன்றுள்ளனர். பின்னர் கொலை செய்து சிறுமியிடமிருந்து வெட்டி எடுத்த நுரையீரலை மாந்திரீகம் செய்வதற்காக பரசுராம் குரில் என்பவரிடம் அவர்கள் கொடுத்துள்ளனர். பரசுராமும், அவரது மனைவியும் நேற்று காலையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் குறித்து பரசுராமின் மனைவிக்கு தெரிந்திருந்தும் யாரிடமும் சொல்லாததன் காரணமாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். தொடக்கத்தில் பரசுராம், காவல்துறையை ஏமாற்றப் பார்த்தார். பின்னர், தீவிரமாக விசாரணை நடத்தியநிலையில் அவர் உண்மையை ஒப்புக்கொண்டார்" எனத் தெரிவித்துள்ளார். மூடநம்பிக்கை மற்றும் 1000 ரூபாய்க்காக ஒரு சிறுமியின் உயிர் பறிக்கப்பட்டிருப்பது பலரது மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விடைத்தாளில் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ எழுதிய மாணவர்கள்; ஆசிரியர்களின் செயலால் அதிரடி நடவடிக்கை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Action by teachers on Students wrote 'Jai Sri Ram' in the answer sheet

உத்தரப் பிரதேச மாநிலம், ஜான்பூர் பகுதியில் வீர் பகதூர் சிங் புர்வன்சால் பல்கலைக்கழகம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த பல்கலைக்கழத்தில் பி-பார்ம் பயின்ற முன்னாள் மாணவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு, அவர்கள் எழுதிய தேர்வில் அவர்களை தேர்ச்சி பெற வைப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. 

இது தொடர்பான புகாரை, பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத் தலைவர் திவ்யான்ஷு சிங், பல்கலைக்கழக துணைவேந்தரிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அவர் அளித்த புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், முன்னாள் மாணவர்கள் முதலாமாண்டு தேர்வில் எழுதிய விடைத்தாள்களின் நகலை எடுத்து சரி பார்த்துள்ளார். அதில், ஜெய் ஸ்ரீ ராம் என்றும், ஜெய் ஹனுமான் என்றும், கிரிக்கெட் வீரர்களான விராட் கோலி, ரோஹித் ஷர்மா என்ற வார்த்தைகளை மட்டும் எழுதி விடைத்தாள்களை நிரப்பியுள்ளனர். அந்த விடைத்தாள்களுக்கு 56% மதிப்பெண்களை ஆசிரியர்கள் மூலம் பெற்றுள்ளனர்.

இதில் அதிர்ச்சியடைந்த மாணவர் சங்கத் தலைவர் திவ்யான்ஷு சிங், இந்த விடைத்தாள்களை முறைப்படி மீண்டும் திருத்த சொன்ன போது, அதில் அனைவருக்கும் பூஜ்ஜியம் மதிப்பெண்கள் மட்டுமே கிடைத்துள்ளது. இதனையடுத்து, விடைத்தாள்களின் நகலையும், முறைப்படி திருத்தப்பட்ட விடைத்தாள்களையும் எடுத்து பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு அனுப்பி இது குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார்.

அதன் அடிப்படையில், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டதில், இந்த முறைகேட்டில் 2 ஆசிரியர்களுக்கு சம்பந்தம் இருப்பதாக தெரியவந்தது. அதன் பேரில், மாணவர்களிடம் பணத்தைப் பெற்று கொண்டு அவர்களை தேர்ச்சி பெற வைத்த அந்த 2 ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டது. மேலும், இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஜெய் ஸ்ரீ ராம், ஜெய் ஹனுமான், கிரிக்கெட் வீரர்கள் பெயரை மட்டுமே எழுதி வைத்த மாணவர்களை தேர்ச்சி பெற வைத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

காதலன் முகத்தில் ஆசிட் அடித்த காதலி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Girlfriend threw toilet cleaning liquid on her boyfriend face

உத்தரப் பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில் சிகிடாவுனி கிராமத்தை சேர்ந்தவர்  ராகேஷ் பிந்த்(26). இவரும் அதைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண்ணும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ராகேஷ் பிந்துக்கு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அப்போது  கழிவறை சுத்தம் செய்யும் திரவத்தோடு(ஆசிட்)  நிச்சயதார்த்தம் நடக்கும் இடத்திற்கு வந்த லட்சுமி தனது கையில் வைத்திருந்த திரவத்தை ராகேஷ் பிந்து முகத்தில் வீசினார். இதில் அவர் முகம் மற்றும் உடலில் உள்ள சில இடங்களில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதனிடையே அங்கிருந்தவர்கள் லட்சுமியைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். தன்னைக் காதலித்து விட்டு வேறொரு பெண்ணை நிச்சயதார்த்தம் செய்ததால் திரவத்தை வீசியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து லட்சுமியைக் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.