Skip to main content

கடந்த 3 மாதங்களில் ஒரு பெண் குழந்தை கூட பிறக்கவில்லை... அதிர்ச்சி தரும் காரணம்...

Published on 22/07/2019 | Edited on 22/07/2019

நாடு முழுவதும் பெண் சிசு கொலைகளை தடுப்பது குறித்து பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வந்தாலும், அதற்கான புதிய சட்டங்கள், திட்டங்கள் ஆகியவை அமல்படுத்தப்பட்டு வந்தாலும், இன்னும் பெண் சிசு கொலை இந்தியாவில் தொடர்ந்தே வருகிறது.

 

uttarakhand government reports on birth ratio

 

 

அந்த வகையில் உத்தரகாண்ட் மாநிலம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ அறிக்கை ஒன்று அங்கு நடைபெறும் பெண் சிசு கொலைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது. உத்தரகாண்ட் அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அம்மாநிலத்தில் உள்ள 132 கிராமங்களில் கடந்த 3 மாதத்தில் ஒரு பெண் குழந்தைக் கூட பிறக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரகாண்ட்டில் உள்ள 132 கிராமங்களில் கடந்த 3 மாதத்தில் 216 குழந்தைகள் பிறந்துள்ளன. ஆனால் இதில் ஒன்று கூட பெண் குழந்தை இல்லை என்பது பலருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது. பெண் சிசுக்கள் கருவிலேயே கலைக்கப்படுவதே இதற்கான காரணம் என கூறப்பட்டுள்ளது.

பெண் குழந்தைகளுக்கென புதிய திட்டங்கள், சலுகைகள் என பல முயற்சிகளை அரசுகள் மேற்கொண்டு வந்தாலும் உத்தரகாண்ட் மாநிலத்தில் நடந்து வரும் இந்த பெண் சிசு கொலைகள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ராமர் கோவில் திறப்பு விழா; உத்தரகாண்ட் அரசு உத்தரவு

Published on 13/01/2024 | Edited on 13/01/2024
Inauguration of Ram Temple; Uttarakhand Govt

உத்தரப் பிரதேசத்தில் உள்ள  அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானம் நடைபெற்று வருகிறது. இது தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்தக் கோயில் இம்மாதம் 22ம் தேதி திறக்கப்படவிருக்கிறது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், கோயில் அறக்கட்டளை சார்பில் சமீபத்தில் மொத்தம் 7 ஆயிரம் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. 

அதேபோல், ராமர் கோயில் அமைவதற்கு ஆதரவாக இருந்த பத்திரிகையாளர்களுக்கும், ராமர் கோயிலுக்காகப் பாடுபட்ட 50 கரசேவகர்களின் குடும்பத்தினருக்கும், குறைந்தபட்சம் 50 நாடுகளில் இருந்து தலா ஒரு பிரதிநிதிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விழாவில் பங்கேற்க இந்தியா மற்றும் வெளிநாடுகளில் 7,000க்கும் மேற்பட்டவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

ராமர் கோவில் திறப்பு விழாவையொட்டி, உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் பல்வேறு ஏற்பாடுகளை அரசு செய்து வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில், அயோத்தியில் மூலவர் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் ஜனவரி 22ம் தேதி மாநிலத்தின் அனைத்து கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும், அன்றைய தினத்தில் மதுபானக் கடைகள் மாநிலத்தில் திறக்கக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டது. 

இதனையடுத்து, ஜனவரி 22ஆம் தேதி கங்கை நதியின் 84 படித்துறைகளிலும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு இலவசமாக படகு சவாரி வழங்கப்படும் என அங்குள்ள படகோட்டும் தொழிலாளர்கள் அறிவித்திருந்தனர். 

இந்த நிலையில், அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவையொட்டி உத்தரகாண்ட் மாநிலத்தில் வரும் ஜனவரி 22ஆம் தேதி மதுபான கடைகள் அனைத்தும் மூடப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. அதில், மாநிலத்தில் உள்ள மதுபான கடைகள், பார்கள் அனைத்தும் 22ஆம் தேதி மூடப்பட வேண்டும் என்று உத்தரகாண்ட் அரசு கூறியுள்ளது. மேலும், தடையை மீறி கடைகளை திறந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

“பெரிய ஆறுதலைத் தருகிறது” - கமல்ஹாசன் பாராட்டு

Published on 29/11/2023 | Edited on 29/11/2023

 

kamalhassan about uttarakhand tunnel issue

 

உத்ரகாண்ட் மாநிலத்தில் சுரங்கத்திற்குள் ஏற்பட்ட சரிவில்  41 தொழிலாளர்கள் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர். அவர்களை மீட்க அரசு தீவிர முயற்சிகள் செய்தது. மேலும் பல்வேறு தொழில்நுட்ப உபகரணங்கள் மூலமாக சரிவு ஏற்பட்ட இடத்தில் துளையிட்ட நிலையில் அங்கு மேலும் சரிவு ஏற்பட்டது. பின்பு 3வது முயற்சியில் வெற்றிகரமாகத் துளையிட்டு ஆக்சிஜன், உணவு வழங்கப்பட்டது. அடுத்து எலி வளை தொழிலாளர்களின் முயற்சியில் குழி தோண்டி சுரங்கத்தில் சிக்கியிருந்த 41 பேரையும் மீட்கும் பணி தீவிரமாக நடந்தது. 17 நாட்கள் பெரும் போராட்டத்துக்குப் பிறகு சுரங்கத்தில் சிக்கிய அனைவரும் மீட்கப்பட்டனர்.

 

இந்த மீட்புக் குழுவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்தவர்களும் ஈடுபட்டிருந்தனர். 41 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டதையடுத்து அந்த மகிழ்சியைப் பலரும் கொண்டாடினர். மேலும் மீட்கப்பட்டவர்களை மாலை அணிவித்து வரவேற்றனர். இந்த நிலையில் மீட்புப் பணிகளில் ஈடுபட்ட அதிகாரிகளை, தமிழக முதல்வர் மற்றும் புதுச்சேரி முதல்வர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் எனப் பலரும் பாராட்டி வருகின்றனர். 

 

அந்த வகையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், “உத்தரகாசியில் சுரங்கத் தொழிலாளர்கள் நாற்பத்தொரு பேரும் தீங்கில்லாமல் மீட்கப்பட்டது பெரிய ஆறுதலைத் தருகிறது. கடுமையான சவால்கள், பின்னடைவுகள் ஏற்பட்டபோதும் சளைக்காமல் தீரத்துடன் போராடி உயிர்களைக் காத்த மீட்புக் குழுவினரும், அவர்களுக்கு உதவிய எலி வளை சுரங்கத் தொழிலாளர்களும் போற்றுதலுக்குரியவர்கள். சுரங்கத்தில் மாட்டிக்கொண்ட தொழிலாளர்களும் மனத்திடத்தோடு காத்திருந்தது பாராட்டத் தக்கது. 

 

17 நாட்கள் தொடர்ந்த இந்தப் போராட்டத்தில் உயிர்களைக் காக்கும் முயற்சியில் ஈடுபட்ட அத்தனை பேருக்கும் என் மனமார்ந்த பாராட்டு. மீட்கப்பட்டவர்களின் குடும்பத்தினரோடு எனது மகிழ்வைப் பகிர்ந்து கொள்கிறேன்” என அவரது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.