Skip to main content

பாஜக நூலகத்தில் பைபிள், குரான் நூல்கள்!

Published on 03/06/2019 | Edited on 03/06/2019


இந்தியாவின் வடக்கில் அமைந்துள்ளது உத்தரகாண்ட் மாநிலம். ஏராளமான இந்துக்கள் புனிதயாத்திரை மேற்கொள்ளும் மாநிலமாகும். புனித பயணம் மேற்கொள்ளும் மற்ற மாநிலங்களை காட்டிலும் சிறந்த மாநிலம் உத்தரகாண்ட். இந்த மாநிலத்தில் தலைநகர் டேராடூன் ஆகும். இந்து சமயத் திருத்தலங்களான ரிஷிகேஷ், ஹரித்துவார், பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்திரி, யமுனோத்திரி ஆகியவையும் இந்த மாநிலத்திலேயே அமைந்துள்ளன. சமீபத்தில் கூட பிரதமர் நரேந்திர மோடி கேதார்நாத் பனி குகையில் சுமார் 18 மணி நேரம் தியானம் மேற்கொண்டார் எனபது குறிப்பிடத்தக்கது.

 

 

UTTARAKHAND BJP LIBRARY

 

 

உத்தரகாண்ட் மாநிலம் முழுவதும் இந்து புனிதத் திருத்தலங்கள் நிறைந்து காணப்படுகிறது. இம்மாநிலத்தில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநிலத்தின் முதல்வராக திரிவேந்திர சிங் ராவத் உள்ளார். அதனைத் தொடர்ந்து மாநிலத்தின் தலைநகரான டேராடூனில் பாஜக கட்சியின் தலைமை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் ஒரு பகுதியில் நூலகம் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 2017- ஆம் ஆண்டு பாஜக தேசிய தலைவர் அமித்ஷா இந்த நூலகத்தை திறந்து வைத்தார். இந்த நூலகத்தில் சிறப்பம்சங்கள் என்ன வென்றால், ராமாயணம் நூல், அனுமன் புராணம், பகவத் கீதை நூல்களுடன், இஸ்லாமிய புனித நூலான குரான் மற்றும் கிறிஸ்துவர்களின் புனித நூலான பைபிள் வைக்கப்பட்டுள்ளது. இது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதற்கு காரணம் அம்மாநில முதல்வர் திரிவேந்திர சிங்  ராவத். சமூக நல்லிணக்கத்தை வளர்க்கும் வகையிலும், அனைத்து மக்களும் நூலகத்திற்கு வந்து படிக்கும் வகையில் நூலகம் அமைய வேண்டும் என முதல்வர் விரும்பியதாக உத்தரகாண்ட் பாஜகவின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

 

HARIDWAR

 

 

அதே போல் இந்த நூலகத்தில் கலாச்சாரம், புவியியல், அறிவியல், சமூக அறிவியல், புகழ் பெற்றவர்களின் வரலாறு புத்தகங்கள், கம்யூனிசம் புத்தகம் மற்றும் அனைத்து மதம் சார்ந்த புத்தகங்களும் வைக்கப்பட்டுள்ளனர். பாஜக கட்சி அனைத்து மதத்திற்கும் பொதுவானது என்பதை மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் இந்த நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வரும் அனைத்து மதங்களை பற்றி தெரிந்துக்கொள்ளும் ஒரு வாய்ப்பாக இந்த நூலகத்திற்கு வந்து படிப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.

Next Story

பாஜக-விசிக மோதல்; ஒருவருக்கு மண்டை உடைப்பு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
BJP-vck clash; One suffered a fractured skull

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூரில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நரசிங்க பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குச்சாவடி முகவர்களுக்கு உணவு கொடுக்க சென்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோதல் வெடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒருவரின் மண்டை உடைந்துள்ளது. மோதலில் காயமடைந்த அருண், அஜித் ,செல்வகுமார் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.