Skip to main content

அமைச்சர்களின் மொபைல் போனுக்கு தடை விதித்த யோகி!

Published on 01/06/2019 | Edited on 01/06/2019

உத்தர பிரதேச மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் மாநில அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர்கள் முக்கிய விவாதங்களில் பங்கேற்காமல், தங்களின் மொபைல் போனுக்கு 'வாட்ஸ் ஆப்'-யில் வரும் தகவல்களை பார்த்துக் கொண்டிருந்ததாகவும், இதனால் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அமைச்சர்கள் மீது கோபப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக உத்தர பிரதேச மாநிலத்தின் தலைமை செயலாளர் அமைச்சர்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் " அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்கும் அமைச்சர்கள் அனைவரும் கூட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும். பின்பு முக்கிய பிரசச்னைகளில் கவனம் செலுத்தி விவாதங்களில் பங்கேற்க வேண்டும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் எதிர்பார்க்கிறார்.

 

 

YOGI ADHITHYANATH

 

 

அமைச்சரவை கூட்டத்தில் மொபைல் போனை கொண்டு வரும் சில அமைச்சர்கள் 'வாட்ஸ் ஆப்' மெசேஜை பார்ப்பதால் கூட்டத்தில் கவனம் இருப்பதில்லை. கூட்டத்தின் நோக்கமும் முழுமையாக நிறைவேறாமல் போகிறது. இது மட்டுமின்றி கூட்டத்தில் நடைப்பெறும் நிகழ்வுகள் மொபைல் போன் மூலம் வெளியே வரும் ஆபத்து உள்ளது. இதனால் அமைச்சர்கள் அனைவரும் கூட்டத்திற்கு வரும் போது மொபைல் போனை கொண்டு வர வேண்டாம்"  என அமைச்சர்களை தலைமை செயலாளர் தனது அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார். உத்தர பிரதேச மாநில அமைச்சரவை கூட்டத்திற்கு மொபைல் போனை அமைச்சர்கள் கொண்டு வரக்கூடாது. அதை மீறி கொண்டு வந்தால் கூட்டத்தில் பங்கேற்க அனுமதியில்லை என திட்டவட்டமாக தெரிவித்தார் முதலவர் யோகி ஆதித்யநாத்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பாஜக வேட்பாளர் மரணம்!

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
BJP candidate Kunwar Sarvesh Kuma news

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் குன்வர் சர்வேஸ் குமார் (வயது 72) உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். சமீபத்தில் இவருக்கு தொண்டையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இது தொடர்பான பரிசோதனைக்காக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்றிருந்தார். அப்போது அங்கு அவருக்கு உடல்நிலை மிகவும் மோசமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

மொராதாபாத் தொகுதிக்கு முதல் கட்ட மக்களவைத் தேர்தலில் வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடைபெற்றது. குன்வர் சர்வேஸ் உள்ளிட்ட 12 பேர் மொராதாபாத் தொகுதியில் வேட்பாளர்களாக களம் கண்ட நிலையில் இவர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

குன்வர் சர்வேஸ் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2019 வரை மொராதாபாத் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தோல்வி அடைந்திருந்தார். ஐந்து முறை எம்எல்ஏவாகவும் இவர் இருந்துள்ளார்.  இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகனும், மகளும் உள்ளனர். குன்வர் சர்வேஸ் குமார் மறைவுக்கு உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.