Skip to main content

திருநங்கைகளுக்கான தனிப்பல்கலைக்கழகம்! பி.எச்டி வரை படிக்கலாம்!

Published on 26/12/2019 | Edited on 26/12/2019

 

திருநங்கைகளுக்கு என தனியாக ஒரு பல்கலைக்கழகம் உருவாகிறது.   உத்தரப்பிரதேசத்தில் இப்பல்கலைக்கழகம் உருவாகி வருகிறது.

 

t

 

திருநங்கைகள் கல்வியறிவில் மேம்படவும், அவர்கள் தயக்கமின்றி, எந்தவித கேலி, கிண்டல்களுக்கு ஆளாகாமல் கல்வியறிவு பெற வேண்டும் என்ற நோக்கத்தில் உத்தரபிரதேசத்தில் உள்ள குஷிநகர் மாவட்டத்தின் பசில்நகரில் தனி பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டு வருகிறது. இங்கு திருநங்கைகள் 1ம் வகுப்பு முதல் முதுநிலை படிப்பு வரை படிக்கலாம். இது தவிர அவர்கள் ஆராய்ச்சி படிப்பும் படிக்கலாம். 

 

இதுகுறித்து திருநங்கைகள் வளர்ச்சிக்கான அறக்கட்டளை தலைவர் கிருஷ்ண மோகன் மிஸ்ரா, ‘’ திருநங்கைகள் கல்வி பயில்வதற்கு வசதியாக பல்கலைக்கழகம் தொடங்கப்படுகிறது. இதற்கான பணி ஏற்கனவே தொடங்கி விட்டது. வரும் ஜனவரி 15ம் தேதி இந்த பிரிவை சேர்ந்த 2 குழந்தைகள் முதலாம் வகுப்பு  கல்வி கற்க அனுமதிக்கப்பட உள்ளனர். வரும் மார்ச் மாதம் பிறவகுப்புகள் தொடங்கப்படும். இதன் மூலம் திருநங்கைகள் ஒன்று முதல் பிஎச்டி வரை படிக்கலாம்’’என்று தெரிவித்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

மணமகன் வராததால் அண்ணனையே திருமணம் செய்துகொண்ட இளம்பெண்!

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
A young girl who married her brother because the groom did not come

மாநில அரசு சார்பில் நடைபெற்ற திருமண விழாவில் மணமகன் வராததால், அரசு நிதியுதவியைப் பெறுவதற்காகத் தனது அண்ணனையே ஒரு பெண் திருமணம் செய்து கொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், உத்தரப் பிரதேச மாநில அரசின் சமூக நலத்துறை சார்பில் அவ்வப்போது ஏழை மணமக்களுக்கு ஒரே இடத்தில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், திருமணம் செய்யும் மணமக்களுக்கு ரூ. 51,000 மதிப்புள்ள பொருட்கள், ரொக்கம் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், கடந்த 5 ஆம் தேதி அன்று மகராஜ்கஞ்ச் பகுதிக்கு அருகே உள்ள லகிம்பூரில் உத்தரப் பிரதேச மாநில அரசு சார்பில் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மணமக்கள் கலந்து கொண்டனர். இதில், திருமணமான பெண்ணான பிரீத்தி யாதவ், அரசு நிதியுதவி பெறுவதற்காகப் பொய்யாக மீண்டும் தனது கணவர் ரமேஷ் யாதவ்வை திருமணம் செய்ய இருந்துள்ளார். ஆனால், குறித்த நேரத்தில் ரமேஷ் யாதவ் வரவில்லை.

இந்த நிலையில், அரசு நிதியுதவியைத் தவறவிடக் கூடாது என்று, பிரீத்தி யாதவின் அண்ணன் கிருஷ்ணாவை திருமணம் செய்வது போல் நடிக்குமாறு அங்குள்ள தரகர்கள் பிரீத்தி யாதவ்விடம் கூறியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனை ஏற்றுக்கொண்ட பிரீத்தி யாதவ், தனது அண்ணன் கிருஷ்ணாவை திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்த விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில், நிர்வாக அதிகாரியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அரசு நிதியுதவி பெறுவதற்காக பொய்யாகத் திருமணம் செய்துகொண்ட பிரீத்தி யாதவ், ரமேஷ் யாதவ், கிருஷ்ணா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

திட்டமிட்டு இரு குழந்தைகள் கொலை? குழம்பும் போலீஸ்!

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
A saloonkeeper who incident two children in uttarpradesh

உத்தரப்பிரதேசம் மாநிலம், புடான் பகுதி அருகே உள்ள பாபா காலணியைச் சேர்ந்தவர் வினோத் குமார். இவருக்கு திருமணமாகி ஆயுஷ் (12), யுவராஜ் (10) மற்றும் அஹான்(8) என்ற 3 மகன்கள் இருந்தனர். வினோத் வசித்த வீட்டின் எதி்ரே, சஜித் என்பவர் முடி திருத்தம் செய்யும் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். வினோத்தும், சஜித்தும், எதிர் எதிரே இருப்பதால், இவர்களுக்குள் நல்ல பழக்கம் ஏற்பட்டு வந்துள்ளது. 

இந்த நிலையில், சஜித் தனது சகோதரர் ஜாவத்தை அழைத்துக் கொண்டு நேற்று (19-03-24) இரவு, வினோத் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு சென்ற சஜித், தனது மனைவிக்கு குழந்தை பிறக்க இருப்பதால் செலவுக்கு ரூ.5,000 பணம் வேண்டும் என்று வினோத் மனைவியிடம் கேட்டுள்ளார். அப்போது, வினோத்தின் மனைவி பணம் எடுப்பதற்காக வீட்டிற்குள்ளே சென்ற போது, தனக்கு உடம்பு சரியில்லை, அதனால் வீட்டு மாடியில் சிறிது நேரம் நடந்து வருகிறேன் என்று கூறி சஜித் மாடிக்கு சென்றுள்ளார். மேலும், சஜித் தன்னுடன் வினோத்தின் மூன்று மகன்களையும் அழைத்து மாடிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து, பணத்தை எடுத்து வினோத்தின் மனைவி மாடிக்கு சென்ற போது, சஜித் மற்றும் அவரது சகோதரர் ஜாவத் ஆகியோர் தனது 3 மகன்களை கத்தியால் குத்திவிட்டு நின்றதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். அங்கு வினோத்தின் மனைவி, இதனைக் கண்டதும் சஜித்தும் அவரது சகோதரர் ஜாவத் ஆகியோர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். 

இதனிடையே, அங்கு வினோத்தின் மகன்கள் கத்தியால் குத்துப்பட்டு படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தனர். இதில், ஆயுஷ் மற்றும் அஹான் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து, யுவராஜ் மீட்கப்பட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், கொலை செய்யப்பட்ட இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அவர்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், வினோத்துக்கும் சஜித்துக்கும் எந்தவித முன்விரோதமும் இல்லை என்றும், சம்பவம் நடந்த அன்று வினோத் வீட்டில் இல்லாத நேரத்தை அறிந்து சஜித்தும் ஜாவத்தும் இந்த கொலையை செய்துள்ளனர் என்பது தெரியவந்தது. மேலும், இந்த கொலைக்கான முழு காரணம் என்ன என்பது தெரியவில்லை என்று போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. 

இதனைத் தொடர்ந்து, இரண்டு கொலைகளைச் செய்த கொலையாளிகளை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது சஜித் போலீசாரிடம் பிடிபட்டார். ஆனால், போலீசாரிடம் இருந்து தப்பிப்பதற்காக போலீசாரை தாக்கி சஜித் தப்பிக்க முயன்றுள்ளார். தப்பிக்க முயன்ற சஜித்தை போலீசார் சம்பவ இடத்திலேயே துப்பாக்கியால் சுட்டு என்கவுண்டர் செய்தனர். மேலும், சஜித்தின் சகோதரர் ஜாவத்தை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இரண்டு குழந்தைகள் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.