Skip to main content

சக மாணவர்கள் முன்பு கட்டிவைத்து அடித்த ஆசிரியை... 11ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை...

Published on 02/12/2019 | Edited on 02/12/2019

சக மாணவர்களுக்கு முன்பு  ஆசிரியர் கட்டி வைத்து அடித்ததால், 11ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பஞ்சாபில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

punjab

 

 

பஞ்சாப் மாநிலத்திலுள்ள லூதியானா அருகே உள்ள குர்மாயில் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மாணவர் தனஞ்செய் திவாரி. இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளி ஒன்றில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் பள்ளியின் விதிமுறையை மீறி, இருக்கமான சட்டை மற்றும் பென்சில் ஃபிட் பேண்ட் அணிந்து வந்திருக்கிறார். இதனால் கோபமடைந்த வகுப்பாசிரியர் பூனம் அவரை தாக்கியுள்ளார். இதன்பின் தலைமை ஆசிரியை சரோஜ் ஷரமிடம் அழைத்து சென்றுள்ளார் வகுப்பாசிரியர். அங்கு வைத்து மாணவர் கைகளை, கழுத்தில் அணியும் டையின் மூலம் கட்டிவைத்து பிரம்மை எடுத்து தாக்கியுள்ளார். அப்போது தலைமை ஆசிரியையின் கணவர் பிரபு தத்தும் சேர்ந்து தாக்கியுள்ளார். 

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர் தனஞ்செய் திவாரி, இதுகுறித்து வீட்டில் தெரிவிக்காமல் இருந்துள்ளார். கடந்த சனிக்கிழமை அன்று தனது வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் தனஞ்செய்.

மாணவரின் தந்தை ப்ரிஜ் ராஜ் திவாரி, போலீசில் புகார் தெரிவித்த பிறகே இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மாணவரை சக மாணவர்கள் முன்னிலையில் அடித்து துன்புறுத்தியதுடன், தலைமை ஆசிரியையின் கணவர் உட்பட பலர், மாணவரின் கையை கட்டி வைத்து அடித்த விவகாரம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக பெற்றோர் அளித்த புகாரை தொடர்ந்து, ஆசிரியர் பூனம், தலைமை ஆசிரியை ஷரோஜ் ஷரம், அவரது கணவர் பிரபு தத் ஆகியோர் மீது தற்கொலைக்கு தூண்டியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் பஞ்சாபில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்த, பஞ்சாப் முதலமைச்சர் விரைவில் அறிக்கை தாக்கல் செய்யும்படி லூதியானா காவல் ஆணையருக்கு தெரிவித்துள்ளார். 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 93 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ள மாணவர் தனஞ்செய் திவாரி தற்கொலை எதிர்பாராதது என தெரிவித்துள்ள போலீசார், குற்றம் சாட்டப்பட்டு தலைமறைவாக உள்ள 3 பேரையும் விரைவில் கைது செய்வோம் என்றும் தெரிவித்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சிறுமி பலியான வழக்கு; வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Shocking information that came out on A case where a girl was incident on her birthday

பஞ்சாப் மாநிலம், பாட்டியாலா பகுதியைச் சேர்ந்தவர் 10 வயது சிறுமி மான்வி., கடந்த மார்ச் 24ஆம் தேதி மான்வி தனது 10 வது பிறந்தநாளை கொண்டாடினார். அதற்காக, மான்வியின் தந்தை பாட்டியாலாவில் உள்ள பேக்கரியில் ஆன்லைன் மூலம் கேக் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார்.

அதன்படி, விநியோகிக்கப்பட்ட கேக்கை, மான்வி தனது குடும்பத்தினருடன் சாப்பிட்டு தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். கேக்கை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே, சிறுமி மான்விக்கும் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் வாந்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால், சிறுமி மான்வி சிகிச்சை பலனின்றி, தன் பிறந்த நாளிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, சிறுமி மான்வி பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து சிறுமியின் குடும்பத்தினர், கேக் ஆர்டர் செய்த பேக்கரி மீது போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், ஆர்டர் செய்யப்பட்ட கேக்கின் மாதிரியை பரிசோதனைக்கு உட்படுத்தி வழக்குப்பதிவு செய்து, காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், போலீசார் நடத்திய விசாரணையின் முடிவானது தற்போது வெளியாகியுள்ளது. அதில், சிறுமி மான்வி சாப்பிட்ட கேக்கில் அளவுக்கு அதிகமான சாக்கரின் எனப்படும் இனிப்புச்சுவை பயன்படுத்தப்பட்டிருந்ததால், மான்வி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பேக்கரி கடை உரிமையாளரை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

கர்ப்பிணி மனைவியை கொடூரமாக கொலை செய்த பகீர் சம்பவம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Incident happened on his pregnant wife in punjab

பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் அருகே உள்ள புல்லேநங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் சுக்தேவ். இவர், பிங்கி (23) என்ற பெண்ணை திருமணம் செய்து அவருடன் வசித்து வந்தார். 6 மாத கர்ப்பமாக இருந்த பிங்கியின் வயிற்றில், இரட்டை குழந்தைகள் வளர்ந்து வந்திருந்தது.

இதற்கிடையில், சில தினங்களாகவே, சுக்தேவுக்கும், பிங்கிக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாகம் இவர்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன் தினம் (20-04-24) வழக்கம் போல், சுக்தேவுக்கும், பிங்கிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் தகராறாக மாறியுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த சுக்தேவ், கர்ப்பிணி பெண் என்றும் பாராமல் மனைவி பிங்கியை கட்டிலோடு சேர்த்து கட்டி வைத்து தீ வைத்துள்ளார். இதில், கர்ப்பிணி பெண்ணான பிங்கியின் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து, சுக்தேவ் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளார்.

இந்த கொடூரச் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த பிங்கியை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், கர்ப்பிணி மனைவியை தீ வைத்து தப்பியோடிய சுக்தேவை பிடித்து கைது செய்த போலீசார், தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த சம்பவம் குறித்து தேசிய மகளிர் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.