Skip to main content

புதிய கல்விக் கொள்கை ; முதல்வர் பேச்சுக்கு மத்திய அமைச்சர் ரியாக்‌ஷன்

Published on 18/08/2023 | Edited on 18/08/2023

 

Union Minister's reaction to Chief Minister's speech about National Education policy

 

கர்நாடகாவில் கடந்த மே மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று முதல்வராக சித்தராமையா பதவியேற்றார். இந்த நிலையில், காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையில் நேற்று முன்தினம் காங்கிரஸ் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய சித்தராமையா, “ தேசிய கல்விக் கொள்கை கர்நாடகாவில் பா.ஜ.க ஆட்சி காலத்தில் அமல்படுத்தப்பட்டது. இது, பா.ஜ.க ஆட்சி செய்யும் எந்த மாநிலத்திலும் அமல்படுத்தப்படவில்லை.

 

தேசிய கல்விக் கொள்கை முறையை அழிப்பதற்கான அனைத்தையும் நாம் கவனமாக தயார்படுத்த வேண்டும். அதனால், தேவையான சில தயாரிப்புகளைச் செய்த பிறகு தான் தேசிய கல்வி கொள்கை முறையை ஒழிக்க முடியும். இந்த ஆண்டு அந்த தயாரிப்புகளுக்கு போதுமான நேரம் இல்லை. கர்நாடகா மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வந்து காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் போது பள்ளிகளில் கல்வியாண்டு தொடங்கிவிட்டது.

 

இந்த கல்வியாண்டில் நடுப்பகுதியில் புதிய பாடத்தை புகுத்தினால் மாணவர்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்தும். அதனால், மாணவர்களின் தற்போதைய கல்விக்கு இடையூறு ஏற்படாத வகையில் இந்த கல்வி ஆண்டில் தேசிய கல்விக் கொள்கை முறை தொடரும். அடுத்த கல்வி ஆண்டு முதல் தேசிய கல்விக் கொள்கை முறை ரத்து செய்யப்படும். இந்திய அரசியலமைப்பின்படி தேசிய கல்விக் கொள்கையை மாற்றி மாநில கல்வி கொள்கை முறை அறிமுகப்படுத்தப்படும்” என்று கூறினார்.

 

இந்த நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர், “கல்வி என்பது முன்னேற்றத்தின் கலங்கரை விளக்கமாக இருக்க வேண்டுமே தவிர அரசியலின் பகடைக்காயாக இருக்கக்கூடாது. நமது கல்வி முறையில் மாற்றங்கள் தேவை. அதனால், பல்வேறு கட்ட ஆலோசனைகள், அனைத்து மக்களின் விருப்பங்கள் ஆகியவற்றை மனதில் வைத்து தான் தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. கர்நாடகா அரசின் இந்த முடிவு சீர்திருத்தத்துக்கு எதிரான செயல் ஆகும். கர்நாடகத்திற்கு முற்போக்கான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய தலைமை தேவையே தவிர அற்ப அரசியல் அல்ல. மாணவர்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு முதல் இடம் கொடுப்போம். அற்ப அரசியல் விளையாடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பா.ஜ.கவை காலி சொம்புடன் ஒப்பிட்டு கிண்டல் அடித்த ராகுல் காந்தி!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Rahul Gandhi taunted by comparing BJP's poetry with empty anvil!

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில் கேரளாவில் 20, கர்நாடகாவில் 14, ராஜஸ்தானில் 13, மத்தியப் பிரதேசத்தில் 6, மகாராஷ்டிராவில் 8, உத்தரப் பிரதேசத்தில் 8, அசாமில் 5, பீகாரில் 5, சத்தீஸ்கரில் 3, மேற்கு வங்கத்தில் 3, ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 88 தொகுதிகள் தேர்தல் நடைபெற்றது. 

கர்நாடகா மாநிலத்தில் நடந்து முடிந்த வாக்குப்பதிவுக்கு முன்னதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய ராகுல் காந்தி, “இந்திய வரலாற்றில் முதன்முறையாக ஒரு கட்சி, அரசியல் சாசனத்தையும் ஜனநாயகத்தையும் அழிக்க விரும்புவதால், முன்பு நடந்த தேர்தல் போல் இந்த தேர்தல் அல்ல. பிரதமரின் உரைகளைக் கேட்டிருப்பீர்கள். அவர் பயந்துவிட்டார். அவர் மேடையில் கண்ணீர் விடக்கூடும். சில சமயங்களில் சீனா, பாகிஸ்தானைப் பற்றிப் பேசுவார். சில சமயம் தட்டுகளை அடிக்க வைத்து, உங்கள் மொபைல் போன்களின் டார்ச் லைட்டை ஆன் செய்யச் சொல்வார். பா.ஜ.க என்ன செய்யப்போகிறது என்பதை நான் சொல்கிறேன். நரேந்திர மோடியின் பாரதிய சொம்பு கட்சி காலியாக உள்ளது.

அது கர்நாடகா மாநிலம், நாட்டிற்கு ஜி.எஸ்.டியாக வழங்கும் ஒவ்வொரு ரூ.100க்கும், அதற்கு ஈடாக ரூ.13 மட்டுமே வரிப் பகிர்வின் கீழ் கிடைக்கிறது. வறட்சி நிவாரணமாக கர்நாடகாவுக்கு சுமார் ரூ.18,000 கோடி கிடைக்க வேண்டும், ஆனால் அதற்கு ‘சொம்பு’ தான் கிடைத்தது” எனத் தெரிவித்தார்.

பா.ஜ.கவை காலி சொம்புடன் ஒப்பிட்டு பேசிய ராகுல் காந்தி, தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்திலும் இதே போன்ற பதிவை ஒன்றை அளித்துள்ளார். அந்த பதிவில், ‘பொதுமக்களின் பணத்தை ஏராளமாகக் கொள்ளையடித்து, பதிலுக்கு காலி பானை வழங்கப்பட்டது. இது மோடியின் பாரதிய சொம்பு கட்சி’ எனப் பதிவிட்டு சொம்புடன் இருந்தபடி இருந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.