அதனைத் தொடர்ந்து பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிப் பெற்றாலும் , மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியே அமையும் எனவும், பாஜக அரசு அமையாது என கட்கரி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேஷ மாநிலத்தில் 2014 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் சமாஜ்வாதி கட்சி , பகுஜன் சமாஜ் கட்சி, பாஜக ஆகிய கட்சிகளால் மும்முனை போட்டி ஏற்பட்டது. அந்த தேர்தலில் பாஜக உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் உள்ள 80 மக்களவை தொகுதிகளில் 72 தொகுதியில் பாஜக வெற்றிப் பெற்றது இதனை உணர்ந்த உத்தரப்பிரதேஷ மாநில முன்னாள் முதல்வர்கள் அகிலேஷ் யாதவ் பகுஜன் சமாஜ் கட்சி தலைவரும் , முன்னாள் முதல்வருமான மாயாவதியுடன் கூட்டணி வைத்து மக்களவை தேர்தலை சந்திக்க முடிவு செய்து தேர்தலை சந்தித்துள்ளனர்.
இவர்களின் கூட்டணி பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. மேலும் மாயாவதி தான் தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்துள்ள நிலையில் சமீபத்தில் ஒரு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தான் பிரதமராக பதவி ஏற்க தயார் என தெரிவித்துள்ளார். இவரின் பேச்சை உறுதிப்படுத்தும் விதமாக அகிலேஷ் யாதவ் இந்திய நாட்டின் அடுத்த புதிய பிரதமர் உத்தரப்பிரதேசத்தில் இருந்து வருவார் என தெரிவித்துள்ளது காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி கட்சிகளிலே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.