Skip to main content

பிரதமராக ஆக வேண்டும் என்ற எண்ணம் இல்லை நிதின் கட்கரி பேச்சு!

Published on 10/05/2019 | Edited on 10/05/2019

பாஜக மூத்த தலைவரும் , மத்திய அமைச்சருமான நிதின் கட்கரி தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் நான் பிரதமராக ஆக வேண்டும் என்ற எண்ணம் இல்லை என்றும் நரேந்திர மோடியே எங்கள் தலைவர் , அவரே என்றும் பிரதமர் என அதிரடியாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மையுடன் வெற்றிப் பெற்று மீண்டும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அமையும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதே போல் ஒடிசா, கேரளா , மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் அதிக இடங்களில் பாஜக வெற்றி பெறும் எனவும், உத்தரப்பிரதேசத்தில் நீங்கள் நினைத்தை விட அதிக தொகுதிகளில் நாங்கள் வெற்றிப்பெறுவோம் என உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.

 

MAYAVATHI AKILESH

 

அதனைத் தொடர்ந்து பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிப் பெற்றாலும் , மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியே அமையும் எனவும், பாஜக அரசு அமையாது என கட்கரி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேஷ மாநிலத்தில் 2014 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் சமாஜ்வாதி கட்சி , பகுஜன் சமாஜ் கட்சி, பாஜக ஆகிய கட்சிகளால் மும்முனை போட்டி ஏற்பட்டது. அந்த தேர்தலில் பாஜக உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் உள்ள 80 மக்களவை தொகுதிகளில் 72 தொகுதியில் பாஜக வெற்றிப் பெற்றது இதனை உணர்ந்த உத்தரப்பிரதேஷ மாநில முன்னாள் முதல்வர்கள் அகிலேஷ் யாதவ் பகுஜன் சமாஜ் கட்சி தலைவரும் , முன்னாள் முதல்வருமான மாயாவதியுடன் கூட்டணி வைத்து மக்களவை தேர்தலை சந்திக்க முடிவு செய்து தேர்தலை சந்தித்துள்ளனர்.

 

MAYAVATHI

 

 

இவர்களின் கூட்டணி பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. மேலும் மாயாவதி தான் தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்துள்ள நிலையில் சமீபத்தில் ஒரு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தான் பிரதமராக பதவி ஏற்க தயார் என தெரிவித்துள்ளார். இவரின் பேச்சை உறுதிப்படுத்தும் விதமாக அகிலேஷ் யாதவ் இந்திய நாட்டின் அடுத்த புதிய பிரதமர் உத்தரப்பிரதேசத்தில் இருந்து வருவார் என தெரிவித்துள்ளது காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி கட்சிகளிலே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

Next Story

திடீரென மயங்கி விழுந்த நிதின் கட்கரி; பிரச்சாரத்தில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Nitin Gadkari suddenly fainted on the campaign platform

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தைப் பொருத்தவரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வரும் 26 ஆம் தேதி  இரண்டாம் கட்டமாக 8 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. யவத்மால் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியின் வேட்பாளர் ராஜஸ்ரீ பாட்டில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் புசாத் நகரில் ராஜஸ்ரீ பாட்டிலை ஆதரித்து பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார். அப்போது பிரச்சார மேடையில் திடிரென நிதின் கட்கரி மயங்கி விழுந்தார். உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு சிறிது நேரம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பினார். பின்பு பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய நிதின் கட்கரி ராஜஸ்ரீ பாட்டிலுக்கு வாக்கு சேகரித்தார்.

இந்தநிலையில், வெப்பம் காரணமாக உடல்நிலை பாதிப்பு எற்பட்டது என்றும், தற்போது நலமாக இருப்பதாகவும் கூறியுள்ள நிதின் கட்கரி உங்கள் அன்பிற்கு நன்றி என்று என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.