Skip to main content

இந்திய விமானப்படைக்கு 'ஆகாஷ் ஏவுகணை' திட்டம்: மத்திய அரசு ஒப்புதல்!

Published on 06/09/2019 | Edited on 06/09/2019

இந்திய விமானப்படைக்கு ரூபாய் 5,000 கோடி மதிப்பிலான ஆகாஷ் ஏவுகணை திட்டத்தை அளிக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்திய விமானப்படையின் பலத்தை அதிகப்படுத்த 'ஆகாஷ் ஏவுகணை' திட்டத்தை விமானப்படைக்கு வழங்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான 'பாதுகாப்பிற்கான கேபினட் கமிட்டி' கூட்டத்தில் ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன் தொடர்ச்சியாக 'ஆகாஷ் ஏவுகணையை' விமானப்படை பாகிஸ்தான் மற்றும் சீனா எல்லையில் பயன்படுத்த உள்ளது. 

union defence high commission decide in aakash missile attached in indian airforce


இந்த ஏவுகணை முழுக்க முழுக்க அதிநவீன தொழில் நுட்பத்துடன் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது. மேலும் ஆகாஷ் ஏவுகணையுடன் பிற நாட்டின் ஏவுகணைகளும் பரிசோதிக்கப்பட்டது. அதில் ஆகாஷ் ஏவுகணை சிறப்பாக செயல்பட்டது. ஆகாஷ் ஏவுகணை 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் திறன் கொண்டது.

union defence high commission decide in aakash missile attached in indian airforce


ஆகவே மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஆகாஷ் ஏவுகணை தயாரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஏவுகணை மூலம் தீவிரவாத தாக்குதல்களை எளிதில் முறியடிக்க முடியும். டெல்லியில் நடந்த சுதந்திர தின அணிவகுப்பில் 'ஆகாஷ் ஏவுகணை' இடம் பெற்றது. இந்தியாவிடம் 6 ஆகாஷ் ஏவுகணைகள் உள்ளது. 


 

சார்ந்த செய்திகள்

Next Story

சர்வதேச விமான கண்காட்சியை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

Published on 13/02/2023 | Edited on 13/02/2023

 

PM Modi inaugurated the International Air Show

 

பெங்களூருவில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை சர்வதேச விமான கண்காட்சி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு 14வது சர்வதேச விமான கண்காட்சி எலகங்கா விமான தளத்தில் இன்று தொடங்கியுள்ளது. 

 

அமைச்சர்கள், வெளிநாட்டு பிரதிநிதிகள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் என முக்கியமானவர்கள் கலந்துகொண்டுள்ள இந்த கண்காட்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மேலும் இந்த கண்காட்சியில் உள்நாட்டு தயாரிப்பு விமானங்கள் காட்சிப்படுத்தப்பட்டு, வானில் சாகசங்களை நிகழ்த்தியது. 

 

இந்த கண்காட்சி மேக் இன் இந்தியா, வெளிநாட்டு முதலீடுகள் உள்ளிட்டவற்றை மையப்படுத்தி நடைபெற்று வருகிறது. இன்று தொடங்கிய சர்வதேச விமான கண்காட்சி வரும் பிப்ரவரி 17 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. 

 

 

Next Story

'அக்னிபத்' திட்டத்தில் சேர மூன்று நாட்களில் 56,960 பேர் விண்ணப்பம்! 

Published on 27/06/2022 | Edited on 27/06/2022

 

56,960 people apply to join 'Agnipath' scheme in three days!

 

'அக்னிபத்' திட்டத்தின் கீழ் விமானப் படையில் சேருவதற்கு மூன்று நாட்களில் 56960- க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். 

 

'அக்னிபத்' திட்டத்தின் கீழ் விமானப்படையில் சேருவதற்கு வரும் ஜூன் 24- ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த நிலையில், நேற்று (26/06/2022) வரை மூன்று நாட்களில் 56960 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. வரும் ஜூலை 5- ஆம் தேதி வரை https://agnipathvayu.cdac.in/AV/ என்ற இணையதளப் பக்கத்தில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

முன்னதாக, அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு கடந்த ஜூன் 14- ஆம் தேதி அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பும், ஆதரவும் நிலவும் நிலையில், மூன்றே நாட்களில் 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.