ADVERTISEMENT
ADVERTISEMENT
டெல்லியில் செய்தியாளர்களுக்கு மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப்சிங் புரி பேட்டியளித்தார். அதில்,
"வந்தே பாரத் திட்டத்தின் மூலம் வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் மற்றும் கப்பல்கள் மூலம் இதுவரை 2.75 லட்சம் பேர் இந்தியா வந்துள்ளனர். தமிழகத்திற்கு 20,000 பேரும், கேரளாவுக்கு 70,000, டெல்லிக்கு 56,000 பேரும் திரும்பியுள்ளனர். மற்ற நாடுகளின் சூழலைப் பொறுத்தே இந்தியாவில் சர்வதேச விமான சேவையைத் தொடங்குவது பற்றி முடிவு செய்யப்படும்" என்றார்.
Show comments