Ukraine issue- Prime Minister Narendra Modi urgent consultation!

உக்ரைனில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தியர்களைப் பாதுகாப்பாக மீட்பது தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

Advertisment

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தற்போது நடைபெற்று வரும் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் உக்ரைனில் நிலவும் சூழல், உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களைப் பாதுகாப்பாக மீட்பது உள்ளிட்டவைக் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார். மேலும், உக்ரைன் விவகாரம் தொடர்பான, இந்தியாவின் நிலைப்பாடு, ஐ.நா. சபையில் உக்ரைன் விவகாரம் தொடர்பான விவகாரங்கள் வரும் போது, இந்தியா சார்பில் எடுத்துரைக்கப்பட வேண்டிய முக்கியமான அம்சங்கள் உள்ளிட்டவைக் குறித்து மத்திய அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

Advertisment

இக்கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் மத்திய அரசின் உயரதிகாரிகளும் கலந்துக் கொண்டனர்.