இந்தியக் கடற்படையில் முதன்முறையாக முன்களவீரர்களாக பொறுப்பேற்ற பெண்கள்...

two women deployed in navy as Sub Lieutenants

இந்தியக் கடற்படையின் போர்க்கப்பல்களில் பணிபுரியும் வகையிலான முன்களவீரர்கள் பிரிவில் முதன்முதலாக இரண்டு பெண் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியக் கடற்படையில் ஹெலிகாப்டர் ரோந்துப் பிரிவில் பணியாற்றி வந்த குமுதினி தியாகி மற்றும் ரீதி சிங். இவர்கள் இருவரும் தற்போது கடற்படையின் முன்களவீரர்கள் பிரிவில் துணை லெப்டினண்ட்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கு முன்னர்வரை, இந்தப் பிரிவில் பெண்கள் இடம்பெறுவது தடைசெய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த விதிகள் மாற்றப்பட்டு முதன்முறையாக குமுதினி தியாகி மற்றும் ரிதி சிங் ஆகியோர் இப்பதவிகளில் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் இந்தியக் கடற்படை மற்றும் இந்தியக் கடலோர காவல்படையின் கடல்சார் ரோந்துப்பணி மற்றும் நீர்மூழ்கி எதிர்ப்புப் போர் விமானங்களில் பணியாற்றுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

indian navy
இதையும் படியுங்கள்
Subscribe