Advertisment

இரண்டு நாட்களில் இரண்டு லட்சத்திற்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா!

corona

இந்தியாவில் கரோனாவின் இரண்டாவது அலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பல்வேறு மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இருப்பினும் கரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனையடுத்து பிரதமர் மோடி, வரும் 8 ஆம் தேதி மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.

Advertisment

இந்தநிலையில் கடந்த 24 மணிநேரத்தில்96,982 பேருக்கு கரோனாபாதிப்பு உறுதியாகிவுள்ளது. அதற்கு முந்தைய 24 மணிநேரத்தில் 1 லட்சத்து 3 ஆயிரத்து 588 பேருக்கு கரோனாஉறுதியாகி இருந்தது. இதன்மூலம் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் கரோனாபாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 570 ஆக உயர்ந்துள்ளது.

Advertisment

மேலும் கடந்த 24 மணிநேரத்தில்446 பேர் கரோனாவால்உயிரிழந்துள்ளனர் என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கரோனா பாதிப்பு அதிகமுள்ள11 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களோடுமத்திய சுகாதாரத்துறை அமைச்சர் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

corona virus India
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe