Skip to main content

ஊருக்குள் புகுந்த இரண்டு தலை நல்லபாம்பு... வணங்க ஆரம்பித்த பொதுமக்கள்!

Published on 14/12/2019 | Edited on 14/12/2019

மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள மிட்னாபூர் கிராமத்தில் பாம்புகள் நடமாட்டம் எப்போதும் அதிகம் இருக்கும். அந்தவகையில்  இரண்டு தலைகள் உடைய நல்லபாம்பு ஒன்று நேற்று அந்த கிராமத்திற்கு வந்துள்ளது. இதை கண்ட பொதுமக்கள் அதனை வணங்க ஆரம்பித்தனர். அதற்கு பால் மற்றும் முட்டைகளை கொடுத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த வந்த வனத்துறையினர் பாம்பை மீட்க முயன்றனர். இந்நிலையில், இரண்டு தலை உடைய நாகம் தெய்வ சக்தி உடையது எனக் கூறி பாம்பை வனத்துறையினரிடம் தர மறுத்துள்ளனர்.
 

fk



இதனால் அதிர்ச்சி அடைந்த வனத்துறையினர், அவர்களிடம் போராடி பாம்பை மீட்டுள்ளனர். மேலும், பாம்பிற்கு இரட்டை தலை இருப்பது பற்றி அவர்களிடம் கேட்டபோது, " இது மனிதர்களுக்கு உள்ளதை போன்று பாம்பிற்கு ஏற்பட்டுள்ள உடலியல் சார்ந்த பிரச்சனை தான். இதற்கும் கடவுளுக்கும் சம்பந்தமில்லை. இந்த வகை பாம்புகளை வெளியில் நடமாட விடுவதை விட காப்பகத்தில் வைத்தால் அதன் ஆயுட்காலத்தை சில ஆண்டுகள் அதிகரிக்கலாம்" என்று அவர் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்

Next Story

திருச்சியில் வீட்டுக்குள் புகுந்த 7 அடி நீளப் பாம்பு!  

Published on 03/02/2024 | Edited on 03/02/2024
A 7-foot-long snake entered the house in Trichy

திருச்சி விமான நிலையம் காமராஜ் நகர் அந்தோணியார் கோயில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவர் இன்று காலை வீட்டில் சமையலறையில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது ஹாலில் மேசை மீது இருந்த பொருட்கள் திடீரென தவறி விழுந்தன. சப்தம் கேட்டு ஹாலுக்கு வந்து பார்த்தபோது, மேசை மீது சுமார் 7 அடி நீளப் பாம்பு ஒன்று நெளிந்து கொண்டு இருந்தது. உடனே அலறியடித்து வீட்டை விட்டு வெளியே ஓடி வந்த அவர், கதவை சாத்தினார்.

அக்கம் பக்கத்தினர் வந்து வீட்டுக்குள் பாம்பை தேடிய போது எங்கோ பதுங்கிக் கொண்டது. பின்னர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். இதனை அடுத்து விரைந்து வந்த திருச்சி தீயணைப்பு நிலைய அலுவலர் சத்தியவர்த்தன் தலைமையிலான வீரர்கள், சுமார் அரை மணி நேரம் போராடி வீட்டுக்குள் இருந்த பாம்பை மீட்டனர். பின்னர் பாம்பு பாதுகாப்பாக வனப்பகுதியில் விடப்பட்டது. கடந்த சில நாள்களுக்கு முன்பு இதே பகுதியில் இதே போன்றதொரு பாம்பு வனத்துறையால் பிடிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Next Story

குளிர்சாதனப் பெட்டியில் படம் எடுத்து ஆடிய நல்ல பாம்பு!

Published on 22/01/2024 | Edited on 22/01/2024
A nice snake that took a picture in a refrigerator near Cuddalore

கடலூர் அருகே செல்லங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் உதயச்சந்திரன். இவரது வீட்டில் பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதனைப் பார்த்த அவர் உடனடியாக பாம்பு பிடி வீரர் செல்லாவுக்கு தகவல் அளித்துள்ளார். தகவலின் பேரில் பாம்பு பிடி வீரர் சம்பந்தப்பட்ட வீட்டிற்கு உடனே வந்தார். அப்போது வீட்டில் எங்கு தேடியும் பாம்பு கிடைக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து வீட்டில் உள்ள குளிர்சாதனப் பெட்டியின் கீழே குச்சியை விட்டுத் தட்டியபோது, திடீரென குளிர்சாதனப் பெட்டியின் பின்புறம் பாம்பு ஏறி படம் எடுத்தது. இதனைப் பார்த்த அனைவருக்கும் அதிர்ச்சி ஏற்பட்டது. உடனே பாம்பைப் பிடிக்க பத்து நிமிடம் போராடி, பாம்பு பிடி வீரர் பாம்பைப் பிடித்து ஒரு டப்பாவில் அடைத்தார். பாம்பு படம் எடுத்து ஆடியபோது, அங்கிருந்தவர்கள் சூடம் ஏத்தி வழிபட்டனர். பாம்பு குளிர்சாதனப் பெட்டியில் படம் எடுத்து ஆடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் போராடி பாம்பைப் பிடித்த பாம்பு பிடி வீரர் செல்லாவுக்கு அனைவரும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்