Advertisment

கர்நாடகாவில் ஐந்து நிமிடங்களில் இரண்டுமுறை நிலநடுக்கம்!

karnataka

Advertisment

கர்நாடகா மாநிலத்தில்சிக்கபல்லாபுரா மாவட்டத்தில், இன்று (22.12.2021) காலை அடுத்தடுத்து இரண்டுமுறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை 7.09 மணியளவில் ஏற்பட்ட முதல் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆகவும், 7.14 மணியளவில் ஏற்பட்ட இன்னொரு நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.3 ஆகவும் பதிவாகியுள்ளதாகநில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.

இந்த இரண்டு நிலநடுக்கங்களினால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. கர்நாடகாவின் சில மாவட்டங்களில் சில மாதங்களுக்கு முன்னரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிலநடுக்கங்கள், ஹைட்ரோ-சீஸ்மிசிட்டியால் ஏற்பட்டதாக கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisment

earthquake karnataka
இதையும் படியுங்கள்
Subscribe