Advertisment

பரிதாபமாக பலியான ஆறு மாத புலிக்குட்டிகள்....

train

Advertisment

மஹாராஷ்ட்ரா மாநிலத்திலுள்ள சந்திரபூர் மாவட்டத்தில் இரண்டு புலிக்குட்டிகள் ரயிலில் அடிப்பட்டு பலியாகியுள்ளது அப்பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. ஆறு மாத குட்டிகளான இரண்டு புலிக்குட்டிகள் பல்ஹர்ஷா இருந்து கோந்தியா வரை செல்லும் ரயிலில், சந்திரப்பூர்- நக்புத் ரயில் நிலையத்துக்கு இடைப்பட்ட தண்டவாளத்தில் அடிப்பட்டு இறந்துள்ளது. இந்த புலிக்குட்டிகள் காலை 7 முதல் 7:30 மணியளவில் இறந்திருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சம்பவ இடத்திலேயே பரிதாபமகா இறந்துள்ளது என்று வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பலியான புலிக்குட்டிகளில் இருந்து மாதிரிகள் ஆராய்ச்சி மையத்திற்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. போஸ்ட்மார்டம் ரிப்போர்ட் நடைபெற உள்ளது என்றும் தெரிவித்தார்.

Maharashtra tiger
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe