ADVERTISEMENT

டுவிட்டர் செய்திகளுக்கு தணிக்கை வருமா? அரசு பதிலளிக்க உத்தரவு

12:42 PM Jan 07, 2020 | Anonymous (not verified)

ADVERTISEMENT

டுவிட்டர் சமூக வலைதளத்தில் வெளியிடப்படும் செய்திகளை கட்டுப்படுத்த, எந்த வழிமுறைகளும் இல்லை. ஆகவே, சமூக வலைதளங்களை தணிக்கை செய்யும் வகையில் வழிமுறைகளை வகுக்க, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி, மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், பதிலளிக்கும்படி, டுவிட்டர் நிறுவனத்துக்கும், மத்திய அரசுக்கும், நோட்டீஸ் அனுப்ப, டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், வழக்கின் விசாரணையை பிப்ரவரி 11க்கு ஒத்தி வைத்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT