Skip to main content

வருகின்ற சட்டமன்றதேர்தலில் கர்நாடக மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்க கூடாது - சந்திரபாபு நாயுடு வேண்டுகோள் 

Published on 01/05/2018 | Edited on 01/05/2018

வருகின்ற கர்நாடக சட்டமன்றதேர்தலில் கர்நாடக மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்க கூடாது என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வேண்டுகோள் வைத்துள்ளார். 
 

chandrababu naidu


 

திருப்பதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர்

ஆந்திர மாநில தலைநகர்  அமராவதி அமைப்பதற்கு 1500.ரூ கோடி நிதி மட்டும் அளித்த பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை அமைப்பதற்கு ரூ.2500 கோடி கொடுத்துள்ளதாக ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார்.  மேலும் 2014 ஆம் ஆண்டு இதே இடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு ஆந்திரவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்படும் என அவர் கொடுத்த  வாக்குறுதியை   நிறைவேற்ற தவறிவிட்டார் பிரதமர் மோடி எனவே கர்நாடகவில் வசிக்கும் தெலுங்கு மக்கள் சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிக்க கூடாது எனக்கூறினார். மேலும் அந்த மேடையில் மோடி பேசிய காணொளியையும் சந்திரபாபு நாயுடு ஒளிபரப்பிக்காட்டினார். 

சார்ந்த செய்திகள்