Skip to main content

வெளிநாட்டிலிருந்து வாட்ஸ் அப்பில் முத்தலாக் கூறி மனைவியை விவாகாரத்து செய்த கணவர்...

Published on 08/08/2019 | Edited on 08/08/2019

குவைத்தில் வேலை பார்க்கும் கணவர் உத்தர பிரதேசத்திலிருக்கும் மனைவியை வாட்ஸ் அப் மூலம் முத்தலாக் சொல்லி விவாகரத்து செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

triple talaq

 

 

உபியிலுள்ள முஸாபர்பூரில் பிஹாரி கிராமத்தைச் சேர்ந்த இசுலாமிய பெண் ஒருவரை அவரது கணவர் குவைத்தில் இருந்தபடி வாட்ஸ் அப் மூலம் முத்தலாக் கூறி விவாகரத்து செய்துள்ளார்.
 

அந்த பெண்ணின் கணவன் வீட்டார் 5 லட்சம் ரூபாய் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக கடந்த மே மாதம் வழக்கு பதிவு செய்துள்ளார். இந்நிலையில் நேற்று அந்த பெண் உள்ளூர் காவல் நிலையத்திற்கு வந்து தனது கணவர் தன்னை குவைத்தில் இருந்தபடி வாட்ஸ் அப் மூலம் விவாகரத்து செய்ததாக கூறி புகார் அளித்துள்ளார்.
 

இது சட்டவிரோதம் என அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார். இதையடுத்து கணவர் மற்றும் குடும்பத்தினர் மீது உத்தர பிரதேச போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

சமீபத்தில்தான் முத்தலாக் தடை சட்டம் அமலுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆறாவது முறை திருமணம் செய்ய முயன்ற முன்னாள் அமைச்சர்... மூன்றாவது மனைவி புகாரை தொடர்ந்து வழக்கு பதிவு!

Published on 03/08/2021 | Edited on 03/08/2021

 

former up minister

 

உத்தரப் பிரதேச மாநிலத்தில் மாயாவதி அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தவர் சவுத்ரி பஷீர். இவர் மீது இவரது மூன்றாவது மனைவியான நக்மா, ஆக்ரா காவல்துறையிடம் பரபரப்பான புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர், சவுத்ரி பஷீர் ஆறாவது முறையாக திருமணம் செய்ய முயற்சி செய்வது தனக்குத் தெரியவந்ததாகவும், இதனையடுத்து அவரிடம் இதுகுறித்து கேட்டபோது அவர் தன்னை தாக்கியதாகவும் கூறியுள்ளார்.

 

மேலும், சவுத்ரி பஷீர் முத்தலாக் கூறி தன்னை விவாகரத்து செய்துவிட்டதாகவும் அந்தப் புகாரில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஆக்ரா காவல்துறையினர், முன்னாள் அமைச்சர் மீது ஐபிசி பிரிவு 504இன் கீழும், முஸ்லிம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் 2019இன் கீழும் வழக்குப் பதிவு செய்துள்ளது.

 

நக்மாவும் சவுத்ரி பஷீரும் கடந்த 2012ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்குப் பிறகு தன்னை சவுத்ரி பஷீரும் அவரது சகோதரியும் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தியதாக வழக்கு தொடர்ந்தார். அதைத் தொடர்ந்து சவுத்ரி பஷீர் 23 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

Next Story

பிரதமர் மோடிக்கு கோயில் கட்டும் இஸ்லாமிய பெண்கள்... காரணம்..?

Published on 11/10/2019 | Edited on 11/10/2019

இஸ்லாமிய பெண்கள் குழுவாக இணைந்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கோவில் கட்டி வருகின்றனர்.  

 

uttarpradesh women bulids temple for modi

 

 

உத்தரபிரதேசத்தின் முசாபர்நகர் பகுதியில் உள்ள இஸ்லாமிய பெண்கள் சிலர் இணைந்து இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளனர். பாஜக அரசு கொண்டு வந்த முத்தலாக் தடை மசோதாவுக்கு தங்களது நன்றிகளை தெரிவிக்கும் வகையில் இந்த கோவிலை கட்டியெழுப்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவிற்கு தலைமை தாங்கும் ரூபி கஸ்னி இதுகுறித்து கூறுகையில், "இஸ்லாமிய பெண்களுக்காக பிரதமர் நிறைய செய்துள்ளார், மேலும் அவர் மதிக்கப்படுவதற்கு தகுதியானவர். முத்தலாக் மசோதா மூலம் இஸ்லாமிய பெண்களின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்தார் அவர். மோடிக்கு உலகம் முழுவதும் பாராட்டு தெரிவிக்கப்படும் நிலையில் நமது சொந்த நாட்டில் அவருக்கு மரியாதையை செலுத்தும் விதமாக இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளோம்" என்று கூறினார்.