Skip to main content

இந்திய மாற்றுப்பாலின பாதுகாப்பு மசோதா 2018-னை எதிர்த்து திருநங்கைகள் ஆர்ப்பாட்டம்! தற்கொலை மிரட்டல்!

Published on 27/12/2018 | Edited on 27/12/2018

கடந்த 17-ஆம் தேதி நடைபெற்ற பாராளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அரசு மாற்றுப்பாலின பாதுகாப்பு மசோதாவில் சட்டத்திருத்தம் கொண்டு வந்தது. இந்த மசோதாவில் திருநர் சமூகத்தால் பரிந்துரைக்கப்பட்ட எந்த ஒரு பாலினத்தவருக்கும் அவருடைய சுய அடையாளம், படிப்புச் சான்றிதழ் தொடங்கி அனைத்து வகையான சான்றிதழ்களிலும் மாற்றம் செய்ய வேண்டும். திருநங்கைகளின் பல்வேறு உரிமைகள் குறித்து மாவட்ட மேற்பார்வை குழு பரிந்துரைக்க வேண்டும் என்ற சரத்தை அந்த மசோதாவில் இருந்து நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை வலியுறுத்தியும், மத்திய அரசு கொண்டுவரவுள்ள திருநர் மசோதாவை திரும்ப பெறக்கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  

 

 

pro

 

புதுச்சேரி சுதேசி பஞ்சாலை அருகே திருநங்கை ஷீத்தல்நாயக் தலைமையில் நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட திருநங்கைகள் கருப்பு உடை அணிந்து,  கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

 

 

 

மத்திய அரசு திருநங்கைகளை அழிக்கும் வகையில் மசோதாவை கொண்டு வந்துள்ளதாகவும், மசோதாவில் 17 திருத்தந்தங்களை கொண்டு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் அப்போராட்டத்தில் திருநங்கைகள் கோரிக்கைகள் வைத்தனர்.  மேலும் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வோம் எனவும் அவர்கள் மிரட்டல் விடுத்தனர்.

 

 

 

திருநங்கைகளுக்கு ஆதரவாக நடைபெற்ற முதலமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் மாநில தலைவர் நமச்சிவாயம் மற்றும் சமூக அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“திருநர்களை மக்கள் புறக்கணிக்கக் கூடாது” - முதல்வர் மு.க. ஸ்டாலின்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
People should not ignore Transgender says Chief Minister MK Stalin

இந்தியாவில் திருநங்கைகளை மூன்றாம் பாலினத்தவராக கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதியன்று உச்சநீதிமன்றம் அங்கீகரித்து உத்தரவிட்டிருந்தது. இதனையொட்டி ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 தேசிய திருநங்கையர் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை திருநங்கைகள் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “தேசிய திருநங்கையர் தினத்தை முன்னிட்டு, திருச்செங்கோடு ஒன்றியக் குழு உறுப்பினர் முனைவர் ரியா தலைமையில் இன்று என்னை வந்து சந்தித்த திருநங்கையினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.

இந்தியாவிலேயே முதன்முறையாகத் திருநங்கைகளுக்காகத் தனி நலவாரியம், அடையாள அட்டைகள், பேருந்துகளில் இலவசப் பயணம், மேற்கொள்ள விடியல் பயணம் திட்டம், உயர்கல்வி பயிலக் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் அரசே ஏற்பு எனப் புரட்சிகரமான பல திட்டங்களைச் செய்துள்ளது திமுக. தங்களது ஆற்றலால் சமூகத்தைத் திரும்பிப் பார்க்க வைக்கும் திருநர்களை மக்கள் புறக்கணிக்கக் கூடாது. நம்மில் ஒருவராகக் கருத வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பிக்கள் குண்டுக்கட்டாக கைது!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
MPs who participated in the protest were arrested with explosives!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. 

இந்த நிலையில், டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் முன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் தலைமையில் எம்.பி.க்கள் இன்று (08-04-24) 24 மணி நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டு போராட்டம் நடத்தினர். இது குறித்து எம்.பி.க்கள் பேசுகையில், ‘சி.பி.ஐ, அமலாக்கத்துறை, ஐ.டி, என்.ஐ.ஏ போன்ற விசாரணை அமைப்புகளை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துவதை தடுக்கவும்’ போராட்டத்தில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை வைத்தனர். 

மேலும், ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகள் அனைத்தும் பா.ஜ.கவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், விசாரணை அமைப்புகளால் தேர்தலின் மாண்பே சீர்குலைக்கப்படுவதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் குற்றச்சாட்டு வைத்தனர். இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் 2 தேர்தல் ஆணையர்களை சந்தித்து முறையிட்டு கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட எம்.பிக்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது