Train at lightning speed ... Real Hero Police who saved the raging!

தற்கொலைசெய்துகொள்ளும் நோக்கோடு ரயில் தண்டவாளத்தில் குதித்த இளைஞரைரயில்வே காவலர் ஒருவர் சீறிப்பாய்ந்து காப்பாற்றிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ளமிதல்வாடி ரயில் நிலையத்தில் நடைபாதையில் நின்றிருந்த இளைஞர் ஒருவர் ரயில் வருவதை அறிந்து தற்கொலை செய்துகொள்ளும் நோக்குடன் தண்டவாளத்தில் குதித்தார். அப்பொழுது அங்கு பணியிலிருந்தரயில்வேகாவலர் ஒருவர் உடனேதண்டவாளத்தில் குதித்து இளைஞரைதண்டவாளத்தில் இருந்து தள்ளிவிட்டார். அவர் இளைஞரை தண்டவாளத்தில் இருந்து அகற்றிய அடுத்த நொடியே மின்னல் வேகத்தில்ரயில் கடந்து சென்றது. இந்த காட்சிகள் வெளியாகி வைரலாகி வரும் நிலையில் இளைஞரை காப்பாற்றிய அந்த ரியல் ஹீரோ போலீசுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Advertisment