/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/bhihar-trian.jpg)
பீகாரில் ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும்பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் பக்சார் மாவட்டத்தில் உள்ள ரகுநாத்பூர் ரயில் நிலையம் அருகே ஆனந்த் விஹார் என்ற இடத்தில் இருந்து காமக்யா நோக்கிச் செல்லும் ரயில் (வண்டி எண் : 12506) தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் ரயிலின் 5 பெட்டிகள் இன்று (11.10.2023) இரவு 09.35 மணியளவில் தடம் புரண்டுள்ளன. விபத்து நடந்த இடத்திற்கு மருத்துவக் குழுவினர் விரைந்துள்ளனர். ரயில் தடம் புரண்ட விபத்தில் உயிரிழப்புகள் ஏதும் இல்லை என முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரயில்வே போலீசாருடன் இணைந்து பொதுமக்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். விபத்து நடந்த இடத்தில் போதிய வெளிச்சம் இல்லாததால் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த விபத்து குறித்த உதவிக்கு வடக்கு ரயில்வே சார்பில் 9771449971, 8905697493, 7759070004, 8306182542 என்ற உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க பீகார் துணைமுதல்வர் தேஜஸ்வி யாதவ் உத்தரவிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)