Advertisment

ரயில் பெட்டிக்கு தீ வைத்த சம்பவம்; 3 பேர் உயிரிழப்பு

The train coach was set on fire; 3 people lost their lives

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை அடுத்த எலத்தூர் என்ற இடத்தில் ஓடும் ரயிலில் தீ வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவத்தில் மூன்று பேர் உயிரிழந்த நிலையில் ஒன்பது பேர் படுகாயம் அடைந்தனர்.

Advertisment

ஆலப்புழா கண்ணூர் விரைவு ரயிலில் தீ வைக்கப்பட்ட இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். விசாரணையில் அந்த ரயிலில் பயணித்த சிலர், பயணிகளுடன் தகராறில் ஈடுபட்ட சூழலில் ஆத்திரமடைந்தவர்கள்ரயில் பெட்டிக்கு தீ வைத்தனர். ரயிலில்தீ விபத்துஏற்பட்டதை அறிந்த பயணிகள் சிலர் ரயில் பெட்டியிலிருந்து குதிக்க முயன்றுள்ளனர். இதில் மூன்று பேர் உயிரிழந்தனர். ஒன்பது பேர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில் ரயில் பெட்டிக்கு தீ வைத்தவர்கள் தொடர்பான சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அந்த காட்சிகளை வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Advertisment

incident Train Kerala
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe