ADVERTISEMENT

17 கோடி பேரில் 9 கோடி பேர் புதிய விதிக்கு மாறியுள்ளனர் - டிராய்

04:55 PM Feb 11, 2019 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய், கேபிள் மற்றும் டிடிஹெச் வாடிக்கையாள்ர்கள் 9 கோடி பேர் சேனல்கள் தேர்வு செய்யும் புதிய விதிமுறைக்கு மாறியுள்ளதாக தெரிவித்துள்ளது.

டிராய் அண்மையில் கேபிள் மற்றும் டிடிஹெச் சேவை கட்டணம் குறித்து புதிய அறிவிப்பை வெளியிட்டது. அதில், வாடிக்கையாளர்கள் 100 இலவச சேனல்களையோ அல்லது கட்டண சேனல்களையோ ரூ. 153 செலுத்தி தேர்வு செய்துகொள்ளலாம் எனத் தெரிவித்திருந்தது. இது பிப்ரவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வருமெனவும் தெரிவித்திருந்தது. தற்போது இதுகுறித்து டிராயின் தலைவர் ஷர்மா, “மொத்தமாக உள்ள 17 கோடி கேபிள் டிவி வாடிக்கையாளர்களில் இதுவரை 9 கோடி பேர் டிராயின் புதிய விதிமுறைக்கு மாறியிருக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT