Skip to main content

ஓடும் ரயிலில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த டிடிஆர்

Published on 24/01/2023 | Edited on 24/01/2023

 

Tragedy happened young woman train running  Uttar Pradesh ticket inspector arrested

 

உ.பி.யில் ஓடும் ரயிலில் இளம்பெண் ஒருவர் டிக்கெட் பரிசோதகரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

கடந்த 16 ஆம் தேதி டேராடூன்-சுபேதர்கஞ்ச் விரைவு ரயில் பொதுப் பெட்டியில் 33 வயது இளம்பெண் ஒருவர் சந்தௌசியில் இருந்து பிரயாக்ராஜ் அருகே உள்ள சுபேதர்கஞ்ச் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த டிக்கெட் பரிசோதகர் கே.என்.சிங் அந்த இளம்பெண்ணுக்கு ஏ.சி பெட்டியில் இருக்கை ஏற்பாடு செய்து கொடுக்க, அவரும் அதில் பயணித்து வந்துள்ளார். 

 

இதையடுத்து இரவு 10 மணியளவில் அந்த ரயில் உத்தரப் பிரதேசத்தில் அலிகார் அருகே சென்று கொண்டிருந்தபோது டிக்கெட் பரிசோதகர் கே.என்.சிங் மற்ற ஒருவருடன் சேர்ந்து அந்த இளம் பெண்ணை வலுக்கட்டாயமாக கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து நடந்த சம்பவம் குறித்து அந்தப் பெண் சந்தாசி ரயில் நிலைய போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் கே.என். சிங்கை கைது செய்த போலீசார், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மற்றொரு நபர் தப்பித்துச் சென்றுவிட்டதாகவும், அவரைத் தேடி வருவதாகவும் தெரிவித்திருக்கின்றனர். ஓடும் ரயிலில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த டிக்கெட் பரிசோதகரை இந்திய ரயில்வே பணியிடை நீக்கம் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.