Skip to main content

"மீண்டும் இந்தியாவுடன் வர்த்தக உறவு?"- பாகிஸ்தான் நிதியமைச்சர்

Published on 30/08/2022 | Edited on 30/08/2022

 

"Trade relations with India again?"- Pakistan Finance Minister

 

மழை வெள்ளத்தால் உருக்குலைந்த பாகிஸ்தான், இந்தியாவுடன் வர்த்தக உறவு மேற்கொள்ள விருப்பம் தெரிவித்த நிலையில் இந்தியப் பிரதமர் மோடி பாகிஸ்தான் நிலையை கண்டு வருந்துவதாக ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். 

 

பாகிஸ்தானில் தொடர் கனமழை காரணமாக இதுவரை 1100க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். மேலும்   அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டதை இந்திய அரசு ரத்து செய்ததை கண்டித்து பாகிஸ்தான் இந்தியாவுடனான வர்த்தக உறவை முறித்துக்கொண்டது.  இது தொடர்பாக இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அந்நாட்டின் நிதியமைச்சர் "மூன்றாண்டுகளுக்கு முன் இந்தியாவுடனான வர்த்தக உறவு முறிக்கப்பட்டதை பாகிஸ்தான் அரசு விலக்க வேண்டும்" என கூறியுள்ளார். அவ்வாறு விலக்கினால் இந்தியாவில் இருந்து அத்தியாவசியப் பொருட்களை வரியின்றி இறக்குமதி செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார். 

 

இதனிடையே பாகிஸ்தானில் வெள்ளப்பாதிப்பை கண்டு வருந்துவதாக மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பதிவில்  "வெள்ளத்தில் உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின்  குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்து விரைவில் இயல்பு நிலை திரும்பும் என நம்புவதாக மோடி கூறியுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாகிஸ்தானில் தாக்குதல்; 5 சீனர்கள் பலியான சோகம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
pakistan Shangla Besham city incident 

பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் சீன நிறுவனங்கள் துறைமுகம், விமான நிலையம்,  சாலை மற்றும் ரயில் போக்குவரத்து உள்ளிட்ட கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இதனால் சீனாவைச் சேர்ந்த ஏராளமானவர்கள் பாகிஸ்தானில் பணியாற்றி வருகின்றனர். இத்தகைய சூழலில் பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள ஷாங்லா என்ற மாவட்டத்திற்கு உட்பட்ட தசு என்ற இடத்தில் இன்று (26.03.2024) தற்கொலைப் படை தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவத்தில் சீனாவைச் சேர்ந்த பொறியாளர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த தாக்குதல் சம்வத்தை பாகிஸ்தான் அரசும் தற்கொலைப் படை தாக்குதல் தான் என உறுதி செய்துள்ளது. மேலும் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பாகிஸ்தான் காவல் துறையினரால் வெளியிடப்பட்டுள்ளன. இது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. அதே சமயம் இந்த தாக்குதல் சம்வத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து மலகாண்டின் போலீஸ் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் (டி.ஐ.ஜி.) கூறுகையில், “ஷாங்லாவின் பெஷாம் நகரில் சீனர்களின் வாகனம் தாக்கப்பட்டதில் ஐந்து சீன நாட்டவர்கள் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டனர். சீன நாட்டவர்கள் இஸ்லாமாபாத்தில் இருந்து தாசு முகாமுக்குச் செல்லும் பொறியியலாளர்கள் ஆவர்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

பிரதமர் இல்லம் முற்றுகை; ஆம் ஆத்மியினர் குண்டுக்கட்டாக கைது

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Siege of Prime Minister's House; Aam Aadmi Party Arrested for Bombing

டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், அதில் 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்.

இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகாமல் தவிர்த்து வந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை ஆம் ஆத்மி கட்சியினர் எடுத்து வருகின்றனர்.

தமிழகத்திலும் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாகப் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தை முற்றுகையிட ஆம் ஆத்மி கட்சியினர்  முற்பட்டனர். ஆனால் காவல்துறை சார்பில் அதற்கு அனுமதி இல்லை எனத் தெரிவித்திருந்தது. இந்நிலையில், தடையை மீறி பிரதமர் மோடி இல்லத்தை முற்றுகையிட முயன்ற ஆம் ஆத்மி கட்சியினர் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் அதிகப்படியான போலீசார் குவிக்கப்பட்டிருப்பதால் பரபரப்பாக உள்ளது.