Skip to main content

வாக்காளர்களின் அரசியல் புரிதல் மற்றும் முதிர்ச்சி மீது முழு நம்பிக்கை - யோகி ஆதித்யநாத் பேட்டி!

Published on 29/09/2021 | Edited on 29/09/2021

 

yogi adityanath

 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்வதற்கான பணிகளில் அம்மாநில கட்சிகள் இறங்கியுள்ளன. உத்தரப்பிரதேசத்தில் ஆளும் பாஜக அரசும், தேர்தலைக் குறிவைத்து துணை பட்ஜெட்டில் பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்துள்ளது. மேலும், அண்மையில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. சட்டப்பேரவை தேர்தலைக் குறிவைத்தே இந்த விரிவாக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

 

இந்தநிலையில், தனியார் ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ள யோகி ஆதித்யநாத், வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக 325 முதல் 350 இடங்களை வெல்லும் என தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. கடந்த 23 ஆண்டுகளாக நான் தீவிர மாநில அரசியலில் இருந்ததால், உ.பி.யின் அரசியல் இயக்கவியல் எனக்கு நன்றாகப் புரிகிறது. உத்தரப்பிரதேச வாக்காளர்களின் அரசியல் புரிதல் மற்றும் அரசியல் முதிர்ச்சி குறித்து நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

 

மேலும், விவசாயிகளின் போராட்டம் குறித்து பதிலளித்த அவர், "விவசாயிகளின் போராட்டத்திற்கு எங்களது எதிரிகள் நிதியுதவி செய்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. இந்தப் போராட்டம், இடைத்தரகர்கள் செயல்படும் மாநிலங்களில் மட்டுமே தாக்கத்தை ஏற்படுத்தும். உத்தரப்பிரதேசத்தில், கொள்முதல் மற்றும் இழப்பீட்டுக்காக விவசாயிகள் அரசுடன் நேரடியாக தொடர்பில் உள்ளார்கள். எழுப்புவதற்கு வேறு எந்தப் பிரச்சனையும் இல்லாததால், விவசாயிகள் போராட்டம் என அழைக்கப்படும் இதனை எதிர்க்கட்சிகள் விஸ்தரிக்க முயல்கின்றனர்" என தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காதலன் முகத்தில் ஆசிட் அடித்த காதலி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Girlfriend threw toilet cleaning liquid on her boyfriend face

உத்தரப் பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில் சிகிடாவுனி கிராமத்தை சேர்ந்தவர்  ராகேஷ் பிந்த்(26). இவரும் அதைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண்ணும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ராகேஷ் பிந்துக்கு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அப்போது  கழிவறை சுத்தம் செய்யும் திரவத்தோடு(ஆசிட்)  நிச்சயதார்த்தம் நடக்கும் இடத்திற்கு வந்த லட்சுமி தனது கையில் வைத்திருந்த திரவத்தை ராகேஷ் பிந்து முகத்தில் வீசினார். இதில் அவர் முகம் மற்றும் உடலில் உள்ள சில இடங்களில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதனிடையே அங்கிருந்தவர்கள் லட்சுமியைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். தன்னைக் காதலித்து விட்டு வேறொரு பெண்ணை நிச்சயதார்த்தம் செய்ததால் திரவத்தை வீசியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து லட்சுமியைக் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.