ADVERTISEMENT

கரோனா வைரஸ்; இந்தியாவில் மேலுமொருவர் உயிரிழப்பு...

05:03 PM Mar 19, 2020 | kirubahar@nakk…

இந்தியாவில் கரோனாவால் மேலுமொருவர் பலியான நிலையில், மொத்த உயிரிழப்பு நான்காக உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

சீனாவிலிருந்து பரவ ஆரம்பித்து தற்போது உலகம் முழுவதும் சுமார் 173 நாடுகளில் பரவியுள்ள கரோனாவால் 2.21 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இதனால் பலியானோர் எண்ணிக்கை 9000 ஐ கடந்துள்ளது. இந்த வைரசால் இந்தியாவில் 167 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலியானோர் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.

ஏற்கனவே கர்நாடகா, டெல்லி மற்றும் மும்பையைச் சேர்ந்த மூவர் உயிரிழந்த சூழலில், தற்போது கரோனா காரணமாகப் பஞ்சாபில் ஒருவர் உயிரிழந்துள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது. உலகளவில் கரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 9,148 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல உலகம் முழுவதும் 2.21 லட்சம் பேருக்கும் மேல் கரோனாவால் பாதிப்படைந்துள்ளனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT