Skip to main content

உலகளவில் மாசடைந்த நகரங்கள்...10 ல் 7 இந்தியாவை சேர்ந்தவை...

Published on 05/03/2019 | Edited on 05/03/2019

உலகளவில் அதிகம் மாசு அடைந்துள்ள நகரங்களின் பட்டியலை தனியார் தொண்டமைப்பு ஒன்று வெளியிட்டுள்ளது.

 

dfhgggfh

 

உலகம் முழுவதும் 3000 நகரங்களில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வுகளை மேற்கொள்ளப்பட்ட 3000 நகரங்களில் 64 சதவீத நகரங்களில் காற்று மாசு அபாயநிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அமைச்சு காரணமாக நுரையீரல் புற்று நோய், பக்கவாதம், மாரடைப்பு, சுவாசக்கோளாறுகள், ஆஸ்துமா உள்ளிட்ட நோய்கள் வருவதற்கான அபாயம் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த அமைப்பு வெளியிட்டுள்ள பட்டியலில் டாப் 10 இடங்களில் 7 இந்திய நகரங்கள் இருப்பது மிகவும் கவலையளிக்க கூடிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

உலக அளவில் இந்தியாவின் குர்கான் தான் முதலிடத்தில் உள்ளது. குர்கானை தவிர, காசியாபாத், பரிதாபாத், பிவாடி, நொய்டா, பாட்னா மற்றும் லக்னோ ஆகிய நகரங்களும் டாப் 10 ல் இடம் பிடித்துள்ளன. டாப் 10 ல் மீதமுள்ள 3 இடங்களில் சீனாவின் ஹோடான் நகரமும் பாகிஸ்தானில் உள்ள லாகூர் மற்றும் பைசலாபாத் நகரங்கள் உள்ளன.

கடந்த பல ஆண்டுகளாக முதலிடத்திலிருந்த சீனாவின் பெய்ஜிங் நகரம் முதல் 10 இடத்திற்குள் வரவில்லை. கடந்த சில ஆண்டுகளாக அங்கு நடைமுறையில் இருக்கும் மாசு கட்டுப்பாடு திட்டங்கள் காரணமாக அங்கு 40 சதவீத  அளவு மாசு அளவு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

போகி கொண்டாட்டம்; புகை மண்டலமாக மாறிய சென்னை

Published on 14/01/2024 | Edited on 14/01/2024
Chennai turns into a smoke zone due to bhogi celebrations

‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ என்ற முதுமொழிக்கு ஏற்ப தமிழ்நாடு முழுவதும் இன்று போகி கொண்டாடப்படுகிறது. தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் உலகெங்கும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட உள்ளது.

தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று அதாவது பொங்கல் திருவிழாவின் முதல்நாள் கொண்டாடப்படுகிறது போகி. கிரிகோரியன் நாட்காட்டியின்படி வழக்கமாக இப்பண்டிகை ஜனவரி 13 அல்லது 14 ஆம் நாளில் கொண்டாடப்படும்.  அந்த வகையில் தைப் பொங்கலை வரவேற்கும் விதமாக மார்கழி மாதத்தின் கடைசி நாளான இன்று தமிழ்நாடு முழுவதும் போகி கொண்டாடப்படுகிறது. 

சென்னையில் மக்கள் அதிகாலையிலேயே எழுந்து உற்சாகமாக மேள தாளங்களை முழங்கிக் கொண்டு பழைய பொருட்களைத் தீயிட்டு வருகின்றனர். இதனிடையே டயர், பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை எரிக்கக் கூடாது எனத் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியிருந்தது. ஆனால் சில இடங்களில் அது மீறப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் சென்னையில் கடும் புகை மூட்டம் ஏற்பட்டு காற்று மாசு அதிகரித்துள்ளது. மேலும் கடும் புகையினால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

Next Story

சென்னையில் அபாய கட்டத்தை எட்டிய காற்று மாசு!

Published on 13/11/2023 | Edited on 13/11/2023

 

Air pollution has reached high levels in Chennai
கோப்புப்படம்

 

இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. அந்த வகையில், தமிழகத்தில் பாரம்பரிய வழிபாடு மற்றும் கலாச்சார முறைகளில் தீபாவளி கொண்டாட்டம் களைக்கட்டியது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை தமிழகத்தின் பல இடங்களில் மக்கள் புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து தீபாவளியைக் கொண்டாடினர். 

 

இதனிடையே காற்று மாசுபாடு காரணமாக உச்சநீதிமன்றம் கூறியுள்ள நேரப்படி தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று தமிழக அறிவுறுத்தியிருந்தது. மேலும் இதனை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காகச் சென்னை மாநகரக் காவல் ஆணையம் தனிப்படையையும் அமைத்திருந்தது. 

 

இந்த நிலையில் மக்கள் அனைவரும் பட்டாசு வெடித்ததன் காரணமாகச் சென்னையில் காற்று மாசு கடுமையாக அதிகரித்துள்ளது. பொதுமக்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து பட்டாசு வெடித்ததன் மூலம் சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரக்குறியீடு அபாயகரமான சூழலை எட்டியுள்ளது. அதிகபட்சமாக மணலியில் 322 என்ற அளவில் காற்றின் தரக்குறியீடு பதிவாகியிருக்கிறது. வேளச்சேரி - 308, அரும்பாக்கம் - 256, ஆலந்தூர் - 256, ராயபுரம் - 232 என பெரும்பாலான இடங்களில் காற்றின் தரக்குறியீடு 200 ஐ தாண்டியுள்ளது. இதனால் அதிக பாதிப்பு மற்றும் சுகாதாரமற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

சென்னையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக இதுவரை 141 வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.