இந்திய ரயில்வே அமைச்சகம் இந்தியாவில் உள்ள மிகவும் மோசமான 10 ரெயில்வே நிலையங்கள், சுத்தமான 10 ரெயில்வே நிலையங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தியளவில் உள்ள 700க்கும் மேற்பட்ட ரெயில் நிலையங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
அதன்படி இந்தியாவின் மிகச்சிறந்த ரெயில்வே நிலையமாக ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர் ரெயில் நிலையமும், மிகவும் மோசமான ரெயில்வே நிலையமாக சென்னை பெருங்களத்தூர் ரெயில்வே நிலையமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் டாப் 10 சுத்தமான ரெயில்வே நிலையங்கள்:
1.ஜெய்ப்பூர்(ராஜஸ்தான்)
2.ஜோத்பூர்(ராஜஸ்தான்)
3.துர்காபூரா(ராஜஸ்தான்)
4.ஜம்மு தாவை
5.காந்திநகர் -ஜேபி(ராஜஸ்தான்)
6.சூரத்கார்(ராஜஸ்தான்)
7.விஜயவாடா
8.உதய்பூர் சிட்டி(ராஜஸ்தான்)
9.அஜ்மீர்(ராஜஸ்தான்)
10.ஹரித்வார்
இந்தியாவின் டாப் 10 மோசமான ரெயில்வே நிலையங்கள்:
1.பெருங்களத்தூர்(தமிழ்நாடு)
2.கிண்டி(தமிழ்நாடு)
3.டெல்லி சாதர் பஜார்
4.வேளச்சேரி(தமிழ்நாடு)
5.கூடுவாஞ்சேரி(தமிழ்நாடு)
6.சிங்கப்பெருமாள்(தமிழ்நாடு)
7.ஒட்டப்பாலம்(கேரளா)
8.பழவந்தாங்கல்(தமிழ்நாடு)
9.அரைரா கோர்ட்(பீஹார்)
10.குர்ஜா(உத்தர பிரதேசம்)
மிகவும் சுத்தமான ரெயில்வே நிலையங்களில் 6 இடங்களை ராஜஸ்தான் மாநிலம் பிடித்துள்ளது.அதே நேரம் மிகவும் மோசமான ரெயில்வே நிலையங்களில் 6 இடங்களை தமிழ்நாடு பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவிலேயே மிக மோசமான ரயில் நிலையம் உள்ள மாநிலம் தமிழகம்... வெளியான அதிர்ச்சி தகவல்!
சார்ந்த செய்திகள்
Next Story
தேர்தல் விடுமுறை; நெரிசலால் உயிரைப் பணயம் வைக்கும் பயணிகள்!
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தத் தேர்தலை முன்னிட்டு நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் மொத்தம் மூன்று நாட்கள் விடுமுறை வருகிறது. இதன் காரணமாக சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு தேர்தல் விடுமுறைக்காக செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் சென்னை, தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு படையெடுக்கும் மக்கள், முன்பதிவு இல்லாத ரயில் பெட்டியில் அதிகப்படியாக பயணம் செய்து வருகின்றனர். சில ரயில்களில் ஆபத்தான வகையில் தொங்கியபடி பயணம் செய்யும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Next Story
ரயிலில் புகுந்த பாம்பு; இளைஞருக்கு நேர்ந்த சோகம்!
கேரளாவில் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த தமிழக இளைஞரைப் பாம்பு கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கேரள மாநிலம் குருவாயூரிலிருந்து மதுரை செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸில் தென்காசியைச் சேர்ந்த கார்த்திக் சுப்பிரமணியம்(21) என்ற இளைஞர் பயணித்தார். ரயிலின் 7ஆம் நம்பர் கோச்சில் அவர் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது, ரயில் எட்டுமானூர் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென கார்த்திக் சுப்பிரமணியம் தன்னை ஏதோ கடித்தது போல் உணர்ந்துள்ளார். உடனடியாக அந்தப் பகுதியைச் சோதனையிட்டு பார்த்ததில் அங்கு ஒரு நாகப்பாம்பு சுருண்டு கிடந்தது கண்டு அதிர்ந்துபோனார்.
தன்னை பாம்பு கடித்ததை உணர்ந்த கார்த்திக் மற்ற பயணிகளிடம் இதனைச் சொல்ல உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு, கோட்டயம் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு உடனடியாக அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் அந்த ரயில் பெட்டிக்குள் எலிகள் அங்கும் இங்குமாக ஏராளமாக ஓடிக் கொண்டிருந்ததாக பயணிகள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக எலிகளை உணவாக சாப்பிட பாம்பு அங்கு வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்ட நிலையில், கோட்டயம் ரயில் நிலையத்திலேயே அந்தப் பெட்டி மட்டும் தனியாக கழட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. கேரளாவில் ரயிலில் பயணித்த தமிழக இளைஞரைப் பாம்பு கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.