Skip to main content

தக்காளி காய்ச்சல்; கேரளாவைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் பரவாமல் தடுக்க மாநில எல்லையில் தீவிர கண்காணிப்பு!

Published on 25/05/2022 | Edited on 25/05/2022

 

Tomato fever; Intensive surveillance at the state border to prevent the spread of Kerala following Tamil Nadu!

 

இந்தியா உட்பட உலகம் முழுக்க கரோனாவின் தாக்கம் மக்கள் வாழ்வையும் பொருளாதாரத்தையும் கடுமையாக பாதித்தது. இந்தியாவில், இதர மாநிலங்களை விட கேரளாவின் பாதிப்பு சற்று உச்சம் தான். கரோனாவின் மூன்றாம் அலையின் தாக்கம் குறைந்து ஆசுவாசப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில், தற்போது கேரளாவில் தக்காளி காய்ச்சல் ஆரம்பமாகியுள்ளது. 


கடந்த சில நாட்களாக கேரளாவின், கொல்லம் மற்றும் அதன் மாவட்டத்திற்குட்பட்ட அஞ்சல், ஆரியங்காவு, கழுதுருட்டி, உள்ளிட்ட ஏரியாவின் குழந்தைகளுக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து தொண்டைப் புண் எரிச்சல், வாய் மற்றும் நாக்கில் புண் ஏற்பட்டதுடன் தலைவலி, கை கால்கள் மற்றும் முதுகு போன்ற பாகங்களின் தோல்களில் அரிப்பு ஏற்பட்டு பாதங்களில் கொப்புளமாகவும் மாறியதுடன் உடலில் சிகப்பு நிறம் கூடிய தடிப்புகளும் ஏற்பட்டுள்ளன. இந்த நோய் கண்ட குழந்தைகள் பசியின்மை காரணமாக சாப்பிட முடியாமலும் அவதிப்பட்டுள்ளனர். கோடையின் போது காணப்படும் சிக்கன் பாக்ஸ் போன்ற தாக்குதலைப் போன்றிருந்தாலும், உடலில் சிகப்பு நிறம் போன்ற தடிப்புகள் காணப்பட்டதால் தக்காளிக் காய்ச்சல் என்றும் மருத்துவ வட்டாரங்கள் வெளிப்படுத்துகின்றன.


குழந்தைகளுக்கு இந்த நோய் கண்ட 5 தினங்கள் காய்ச்சலாலும், தொண்டைப் புண் போன்றவைகளோடு பசியின்மையாலும் அவதிப்பட்டுத் துவண்டு போயிருக்கின்றனர். அதன் பின்னர் தரப்படும் மருத்துவ சிகிச்சையையடுத்து, தாக்குதலின் வீரியம் குறைந்து குணமாகிவிடுகிறார்கள். ஆனாலும் இதன் தாக்கம் மிதமான பாதிப்பையே ஏற்படுத்துமாம்.


கொல்லம் மாவட்டம் முழுமையிலும் சுமார் 85க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தக்காளி காய்ச்சல் கண்டறியப்பட்டிருக்கிறது. குறிப்பாக 5 முதல் 10 வயது வரையிலான குழந்தைகளை மட்டுமே குறிவைத்து தாக்கப்படுகிற தக்காளி காய்ச்சல் காக்ஸ்சாக்கி வைரஸ் ஏ.16. எனப்படுகிற வைரசால் ஏற்படுகின்றன. இருப்பினும். அத்தனை பெரிய, பாதிப்புகளை ஏற்படுத்தி விடாது என்கிறார்கள் கேரள சுகாதாரத்துறையினர்.


5 வயது முதல் 10 வயது வரையிலான தக்காளி காய்ச்சலால் தாக்கப்படும் குழந்தைகள் பெரும்பாலும் அங்கன் வாடிகளைச் சார்ந்தவர்களாகவே இருக்கின்றனர். சமூகத்தின் விளிம்பு நிலை மக்களின் 5 முதல் 10 வயது வரையிலான குழந்தைகள் அரசின் அங்கன்வாடிகளிலேயே வைத்து உணவு, உடை உறைவிடம் என்று பராமரிக்கப்படுகிறார்கள்.


கொல்லம் மாவட்டத்தின் ஆரியங்காவு ஊராட்சிக்குட்பட்ட கழுதுருட்டி பகுதியின் அங்கன் வாடியில் சுமார் 6 குழந்தைகள் தக்காளி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சையிலிருந்திருக்கிறார்கள். அங்கு ஆய்வு செய்த ஆரியங்காவு ஊராட்சியின் சுகாதார ஆய்வாளரும் ஹெல்த் இஸ்பெக்டருமான அருண்குமார், அங்கன் வாடியைச் சோதனை செய்து விட்டு இங்கு 6 குழந்தைகளுக்குப் பரவல் கண்டுள்ளதால் சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளனர். குழந்தைகளின் தொண்டையில் ஏற்படும் சளி கட்டியாகி அது தடிப்பாக வாயில் புண் ஏற்பட்டு உடலில் சிகப்பான தடிப்பும் காணப்படும். இதனால் குழந்தைகளால் உணவு உண்ண முடியாது. சிரமப்படுவார்கள். இந்தக் குழந்தைகள் விளையாடுகிற விளையாட்டுப் பொருட்கள், அவர்கள் ஒன்றாக இருக்கும் போதும், உண்ணும் பாத்திரங்கள், உடுத்துகிற ஆடைகள் போன்றவைகளின் மூலம் இந்த வைரஸ் பரவுவதால் தக்காளி காய்ச்சல் ஏற்படுகிறது.


இது போன்ற அறிகுறிகள். தென்பட்டால் உடனடியாக சிகிச்சைக்காக அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும். இம்யூனிட்டி பவர் என்கிற உடலில் எதிர்ப்பு சக்தி குறைபாடுகளிருக்கும் குழந்தைகளையே இந்நோய் தாக்குகிறது என்றார்.


இது குறித்து மேலும் அறியும் பொருட்டு தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் டாக்டர் ஜெஸ்லினிடம் பேசியம் போது, “கடுமையான வெயில், வெப்பமடித்த பின்பு உண்டாகும் மழை மறுபடியும் வெயிலின் தகிப்பு காரணமாக ஏற்படும் அப்நார்மல் எனப்படும் அன்யூஸ்வல் க்ளைமேட் காரணமாக இந்த நோய் ஏற்படுகிறது. இதுவும் ஒரு வகையான ப்ளூ வைரஸ் வகையைச் சேர்ந்தது தான்” என்கிறார்.


கேரளாவில் கண்டறியப்பட்ட தக்காளி காய்ச்சலின் தாக்கம் தமிழகத்திற்குள்ளும் பரவாமல் தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற் கொள்ளும் வகையில் தென்காசி மாவட்டத்தின் எல்லையை ஒட்டி கேரளாவின் கொல்லம் மாவட்டம் அமைந்திருப்பதால், தென்காசி சுகாதாரப் பணிகளின் துணை இயக்குநர் டாக்டர் அனிதா தலைமையிலான சுகாதார உயரதிகாரிகள் எல்லைப் பகுதியைத் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 7 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்; சென்னையில் பரபரப்பு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Rs. 7 crore worth of gold seized; Sensation in Chennai
மாதிரிப்படம்

சென்னை விமான நிலையத்திற்கு இன்று (27.03.2024) துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் என்ற விமானம் ஒன்று வந்துள்ளது. இந்த விமானத்தில் வந்தவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது கேரள மாநிலம் கோட்டையம் பகுதியைச் சேர்ந்த 37 வயதான பெண் ஒருவர் தனது 14 வயது மகளுடன் வந்துள்ளார்.

இவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது ரூ. 7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் லண்டனில் இருந்து துபாய் வழியாக வந்த போது கடத்தல் தங்கத்தோடு சிக்கியது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து 37 வயதான அப்பெண்ணை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் நீதிமன்ற காவலில் அடைத்தனர். அண்மைக் காலத்தில் பயணி ஒருவரிடம் இருந்து 12 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது இதுவே முதல்முறை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும், ரூ.7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னை விமான நிலைய அதிகாரிகள் மற்றும் விமான பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

“எல்லா மலையாளிகளுக்கும்...” - விஜய் வெளியிட்ட செல்ஃபி வீடியோ வைரல்!

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
vijay kerala selfie video

விஜய் நடிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. விஜய்யின் 68வது படமாக உருவாகி வரும் இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தில், பிரஷாந்த், பிரபுதேவா, மீனாட்சி செளத்ரி, சினேகா, லைலா, மோகன், ஜெயராம், வைபவ், பிரேம் ஜி, யோகி பாபு என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர். கடந்த புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் ஆகிய புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. 

இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, தாய்லாந்து, பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் நடந்தது. இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு கடந்த 18ஆம் தேதி முதல் கேரளாவில் நடைபெற்று வருகிறது. காவலன் படத்திற்குப் பிறகு 14 ஆண்டுகள் கழித்து கேரளாவிற்கு விஜய் செல்வதால், அவரை வரவேற்று போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டன. படப்பிடிப்பிற்காக கடந்த 18 ஆம் தேதி விமானம் மூலம் விஜய் கேரளா சென்ற நிலையில் அவரைக் காண திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர். பின்பு விஜய், தனது ரசிகர்களுக்கு கையசைத்துவிட்டு போலீஸ் பாதுகாப்புடன் காரில் ஏறிச் சென்றார். அவர் வெளியில் செல்லும்போது நூற்றுக்கணக்கான ரசிகர்கள் காரை சுற்றி வளைத்து நின்றதால், கூட்ட நெரிசலில் கார் சிக்கிக்கொண்டு நகர முடியாமல் தவித்தது. ரசிகர்களின் நெருக்கத்தால் கார் கண்ணாடி உடைந்துள்ளது. மேலும் காரின் பின்பகுதி, முன்பகுதி எனப் பல இடங்களில் சேதங்கள் ஏற்பட்டன.

இதையடுத்து திருவனந்தபுரத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. இதனால், விஜய்யை காண மைதானத்திற்கு வெளியே ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். இதனை அறிந்த விஜய், வெளியே வந்து ரசிகர்களை சந்தித்து அவர்களின் அன்பை பெற்று, அங்கிருந்த கேரவன் வாகனம் மீது ஏறி ரசிகர்களிடம் மலையாளத்தில் பேசி நன்றி தெரிவித்தார். தொடர்ந்து தினமும் அவர் ரசிகர்களை பார்க்கும் வீடியோவும், அவர் பேசும் வீடியோவும் சமுக வலைதளங்களில் வைரலாகி வந்தது. அந்த வகையில் ரசிகர்களுடன் அவர் எடுத்துக் கொண்ட செல்ஃபி வீடியோவை விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், ”எல்லா மலையாளிகளுக்கும்” என குறிப்பிட்டு மலையாளத்தில் அனைவருக்கும் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.