தெலுங்கானா சட்டமன்ற தேர்தல் டிசம்பர் மாதம் 7ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த மாநிலத்தில் மொத்தமாக 119 தொகுதிகள் உள்ளது. இத்தேர்தலில் டி. ஆர். எஸ் கட்சி, பாஜக, காங்கிரஸ், தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. இந்த மாநிலத்தில் காங்கிரஸின் ஸ்டார்களாக கருதப்படும் ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோர் ஏற்கனவே காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.
இந்நிலையில், இன்று பாஜகவுக்கு ஆதரவாக அக்கட்சியின் மூத்த தலைவரும், இந்திய பிரதமருமான நரேந்திர மோடி நிஜாமாபாத்திலும், பின்னர்மஹபூப் நகரிலும் என இரு பிரச்சார கூட்டங்களில் பா.ஜ. வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார்.