Advertisment

இந்தியாவில் ஒரேநாளில் அதிகரித்த கரோனா உயிரிழப்பு... சுகாதாரத்துறை விளக்கம்!

today corona rate in india

இந்தியாவில்மூன்றாவது நாளாக ஒரு லட்சத்துக்கும் கீழ் தினசரி கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்தியாவில் இதுவரை 2.91 கோடி பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisment

மத்திய சுகாதாரத்துறை இன்று (10.06.2021) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்தியாவில் கரோனா தொற்று பாதிப்பு 2,91,83,121 ஆக உயர்ந்துள்ளது. ஒரேநாளில்94,052பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisment

இந்தியாவில் ஒரேநாளில்1,51,367 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தனர். இதனால் ஒட்டுமொத்தமாக இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 2,76,55,493 ஆக உயர்ந்துள்ளது. இதனால் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 94.55 சதவீதமாக இருக்கிறது. அதேபோல் உயிரிழப்பு விகிதம் 1.22 சதவீதமாக உள்ளது. இந்தியாவில் ஒரேநாளில் கரோனாவுக்கு6,148 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இதுவரை கரோனாவால் ஒட்டுமொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,59,676 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கரோனாவுக்கு 11,67,952 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

2 ஆயிரம், 3 ஆயிரம்என்ற அளவில் தினசரி உயிரிழப்புகள் இருந்துவந்த நிலையில், நேற்று (09.06.2021) ஒரேடியாக 6,148 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், நேற்று ஒருநாள் கரோனா உயிரிழப்புஅதிகரிக்க பீகார் மாநிலமேகாரணம் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. பீகாரில் கரோனாவால் இறந்தவர்களின் விவரம் சரிசெய்து திருத்தப்பட்ட நிலையில், ஒரேநாளில் பீகாரில் 3,971 பேர் பலி எனஎண்ணிக்கை அதிகரித்துள்ளதாககுறிப்பிடப்பட்டுள்ளது.

corona virus India
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe