Skip to main content

இதுவரை 3.05 கோடி பேருக்கு கரோனா! - இந்திய கரோனா நிலவரம்

Published on 05/07/2021 | Edited on 05/07/2021

 

today corona rate in chennai

 

இந்தியாவில் இதுவரை 3.05 கோடி பேருக்கு மேல் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

 

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று (04.07.2021) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்தியாவில் கரோனா தொற்று பாதிப்பு 3,05,42,158 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரேநாளில் 49,796 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

 

நேற்று ஒரேநாளில் 42,352 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தனர். இதனால் ஒட்டுமொத்தமாக இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 2,97,00,430 ஆக உயர்ந்துள்ளது. இதனால் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 97.11 சதவீதமாக இருக்கிறது. அதேபோல் உயிரிழப்பு விகிதம் 2.40 சதவீதமாக உள்ளது. இந்தியாவில் நேற்று ஒரேநாளில் கரோனாவுக்கு 723 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இதுவரை கரோனாவால் ஒட்டுமொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,02,728 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கரோனாவிற்கு 4,82,071பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்