Skip to main content

திருப்பதி ஏழுமலையானுக்கு குறையாத வருமானம்!

Published on 05/11/2020 | Edited on 05/11/2020

 

Tirupati temple income corona time


கரோனா பரவலால் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. பொருளாதாரத்தை மீட்க கரோனா ஊரடங்கை நீக்கிவருகிறது மத்திய அரசு. அதில் வழிப்பாட்டு தலங்களை திறக்கவும் அனுமதித்தது. உலக புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலை கடந்த ஜூலை மாதமே திறந்துவிட்டது ஆந்திரா அரசாங்கம். கோயிலில் பணியாற்றும் அர்ச்சகர் முதல் கோயில் பாதுகாப்பு பணியில் உள்ள காவலர்கள் வரை நூற்றுக் கணக்கானவர்களுக்கு கரோனா பரவி அர்ச்சகர் உட்பட சிலர் இறந்தும் கோயிலை மூடவில்லை.
 

10 வயதுக்கு உட்பட்டவர்கள், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் கோயிலுக்குவர அனுமதியில்லை என்கிறது கோயில் நிர்வாகம். ஆனாலும் அரசியல் பிரமுகர்கள் உட்பட அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு இந்த விதி பொருந்துவதில்லை. அவர்கள் வந்து தரிசனம் செய்துவிட்டுதான் செல்கிறார்கள். பகலும் – இரவும் பரபரப்பாகவே இருந்த ஏழுமலையான் கோயில் தற்போது கலையிழந்து காணப்பட்டாலும் வருமானம் மட்டும் குறையவில்லை என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.



சராசரியாக தினமும் 70 ஆயிரம் பக்தர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருவார்கள். இவர்கள் மூலமாக தினசரி உண்டியல் வருமானம் ரூ.2.5 கோடி. லட்டு விற்பனை, 300 ரூபாய் தரிசன டிக்கட் விற்பனை, மற்ற பூஜை கட்டணம் உட்பட பல்வேறு வகைகளில் கோயிலின் வருமானம் தினசரி ரூ.5 கோடி. கரோனா பரவலை தடுக்க அரசின் உத்தரவால் மார்ச் 20ஆம் தேதி கோயில் மூடப்பட்டு, பக்தர்கள் தரிசனத்துக்காக மீண்டும் ஜூன் 11ஆம் தேதி திறக்கப்பட்டது. இலவச தரிசனத்தை ரத்து செய்து ஒரு டிக்கெட் 300 ரூபாய் என தொடக்கத்தில் ஆன்லைன் டிக்கெட் 9 ஆயிரம், நேரடி டிக்கட் 3 ஆயிரம் என வழங்கப்பட்டு வந்தது. தற்போது 26 ஆயிரம் டிக்கெட் விநியோகிக்கப்படுகிறது. மணிக்கு 5 ஆயிரம் பேர் தரிசனம் செய்த இடத்தில் தற்போது 1,500 பேர்தான் தரிசனம் செய்கிறார்கள். அதேபோல் 67 லட்டு கவுன்டர்கள் உள்ளன. அதில் 27 மட்டுமே திறக்கப்படுகின்றன. 
 

தங்கும் அறைகள் 1 நாள் வாடகைக்கு மட்டுமே வழங்கப்படுகின்றன. மொட்டை அடிப்பதில் கட்டுப்பாடு என பல மாற்றங்கள் செய்தாலும், வெளிமாநில பக்தர்கள் 300 ரூபாய் தரிசன டிக்கெட்டிற்கு புக் செய்துவிட்டு, அதை வைத்து இபாஸ் வாங்கிக்கொண்டு வரவேண்டும் என கட்டுப்பாடு இருப்பதால் பக்தர்கள் வருவதில்லை. தற்போது தினமும் அதிகபட்சமாக 25 ஆயிரம் பக்தர்கள் அளவே வருகின்றனர். கடந்தாண்டு இதே பிரம்மோற்சவ நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கை 3 லட்சம். புரட்டாசி மாதத்தில் தினசரி 1.5 லட்சம். ஆனால் இந்தாண்டு பிரம்மோற்சவத்துக்கு கரோனாவால் பக்தர்களின் வருகை வெறும் 25 ஆயிரம்தான். புரட்டாசி மாத பக்தர்கள் வருகையும் குறைவு. பக்தர்கள் வருகை குறைவே தவிர வருமானம் குறையவில்லை எனச்சொன்னார்கள்.
 

அதாவது இந்த அக்டோபர் 3ஆம் தேதி 13,486 பேர் சுவாமி தரிசனம் செய்ததில் 1.02 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கையாக வந்துள்ளது. அக்டோபர் 4ஆம் தேதி உண்டியல் வருமானம் ரூ.2.14 கோடியாகவும், கடந்த 5ஆம் தேதி 18 ஆயிரத்து சொச்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய, உண்டியல் வருமானம் 1.44 கோடி ரூபாய் கிடைத்துள்ளது என்கிறது கோயில் நிர்வாகத்தின் அறிக்கை. கரோனவுக்கு முன்பு சராசரியாக தினமும் 2.80 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கை பெற்ற திருப்பதி தேவஸ்தானம் தற்போது 1 கோடியைத்தான் பெறுகிறது.
 

அதாவது கரோனாவுக்கு முன்பு தினமும் 70 முதல் 80 ஆயிரம் பக்தர்கள் வருவார்கள். அவர்கள் வழியாக 3 கோடி ரூபாய் உண்டியல் வருமானத்தை பெற்றது. தற்போது 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் பேர் தான் வருகிறார்கள். இவர்கள் மூலமாக ரூ.1 கோடி உண்டியல் வருவாய் பெறுகிறது. கடந்த காலத்தோடு ஒப்பிடும்போது, இப்போது குறைந்த பக்தர்கள் வருகிறார்கள், ஆனால் உண்டியல் காணிக்கை அதிகம். அதேபோல் கரோனாவுக்கு பயந்து கோயிலுக்கு நேரடியாக வரமுடியாதவர்கள் இஉண்டியல் (ஆன்லைன் ட்ரான்ஸ்பர்) மூலமாக பணத்தை செலுத்துகிறார்கள். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இஉண்டியலுக்கு ரூ.1.79கோடி வந்தது. இந்தாண்டு ஏப்ரல் மாதம் ரூ.1.97 கோடி வந்துள்ளது.
 

கரோனா காலத்தில் தேவஸ்தானத்துக்கு பெரியளவில் செலவு குறைந்துள்ளது. ஆனால், வருவாய் பெரியளவில் குறையவில்லை. இதனை 2021-2022 ஆம் ஆண்டு தேவஸ்தான நிதிநிலை அறிக்கை வெளியாகும்போது அறிய முடியும் என்றார்கள் கோயிலில் பணியாற்றுபவர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்! 

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Madurai Vaigai River woke up Kallazhakar

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு பெரும் விமரிசையாக ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இதனை லட்சக்கணக்கான மக்கள், பக்தர்கள் நேரில் கண்டு களிப்பர். தகதகக்கும் தங்கக் குதிரையில் கம்பீரமாக வலம்வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றது.

இந்த சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரைத் திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் நேற்று (22.04.224) கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து பரவசம் அடைந்தனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அதே சமயம் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக கள்ளழகர் மதுரை வந்தடைந்தார். கள்ளழகர் உடன் பாரம்பரியமாகக் கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டது.

இந்நிலையில் மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு இன்று (23.04.2024) நடைபெற்றது. கள்ளழகரை தரிசிக்க ஆயிரக்கணக்கான மக்கள் வைகை ஆற்றில் குவிந்தனர். இதனையடுத்து பச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றின் கரைக்கு வருகை புரிந்தார். கள்ளழகர் வைகையாற்றில் இறங்குவதற்கு முன்பு ஆற்றங்கரையில் மாலை அணிவித்து அகழருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்களின் கோஷம் விண்ணை முட்ட, தங்கக்குதிரையில் பச்சைப்பட்டு உடுத்தி வைகையாற்றில் கள்ளழகர் இறங்கினார். கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வைக் காண சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார், புகழேந்தி, ஆதி கேசவலு மற்றும் அருள் முருகன் உள்ளிட்டோர் வருகை புரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம்; பக்தர்கள் உற்சாகம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Meenakshi - Sundareswarar Chariot; Devotees excited

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரை திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிலையில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர்.

மேலும், மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வுக்காக மதுரை வந்தடைந்தார். கள்ளழகர். உடன் பாரம்பரியமாக கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.