திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று (06/09/2020) ஒருநாள் மட்டும் பக்தர்கள் இலவச தரிசனம் மேற்கொள்ள தேவஸ்தானம் அனுமதி அளித்துள்ளது.
கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் செப்டம்பர் 30- ஆம் தேதி வரை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனம் ரத்து என தேவஸ்தானம் அறிவித்திருந்தது. இந்நிலையில், இலவச தரிசனத்திற்கு அனுமதிக்கக் கோரி அலிபிரியில் இரவு முழுவதும் பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, இன்று ஒருநாள் மட்டும் திருப்பதி கோயிலில் இலவச தரிசனம் மேற்கொள்ள தேவஸ்தானம் அனுமதி அளித்துள்ளது.