Skip to main content

உயரும் திருப்பதி லட்டு விலை... பக்தர்கள் அதிர்ச்சி!

Published on 02/01/2020 | Edited on 03/01/2020


திருப்பதி என்றால் அனைவருக்கும் உடனடியாக ஞாபகம் வருவது ஏழுமலையான். அதை விட அதிகம் நினைவில் வருவது அங்கு கொடுக்கப்படும் லட்டுக்கள். அதில்தான் தற்போது சிக்கல் வந்துள்ளது. திருப்பதி கோயிலுக்கு நடைபயணமாக வரும் பக்தர்களுக்கு  ஒரு லட்டு இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. மேலும் பக்தர்கள் 70 ரூபாய் கொடுத்து நான்கு லட்டுகளை பெற்றுக்கொள்ளலாம்.



இதனால் ஆண்டுக்கு 200 கோடி நஷ்டம் ஏற்படுவதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்திருந்தார்கள். இந்நிலையில் வைகுண்ட ஏகாதசி முதல் இந்த இழப்பை ஈடுசெய்ய வழக்கபோல ஒரு லட்டை இலவசமாகவும், அதற்கு மேல் வாங்கும் லட்டுக்களை தலா ஒன்று 50 ரூபாய் என்ற அளவில் விற்பனை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 70 ரூபாய் கொடுத்து நான்கு லட்டுகளை பெற்றவர்கல் இனி 200 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னை அருகே நிலநடுக்கம்!

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Earthquake near Chennai

சென்னை அருகே லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே இன்று (14.03.2024) இரவு 8.43 மணியளவில் 3.9 ரிக்டர் அளவில் நில அதிர்வு பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.  அதாவது திருப்பதியிலிருந்து கிழக்கு வடகிழக்கு திசையில் 58 கி.மீ. தொலைவில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. சென்னை அருகே உள்ள கும்மிடிப்பூண்டி மற்றும் சூலூர் பேட்டை ஆகிய சுற்றுப் பகுதியில் இந்த நில அதிர்வு உணரப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

Next Story

“கோயிலில் இருக்கேன்” - அரசியல் கேள்வியை தவிர்த்த ஜெயம் ரவி

Published on 10/02/2024 | Edited on 10/02/2024
jayam ravi omitted vijay political entry question

ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக இறைவன் படம் வெளியானது. இதையடுத்து ஆண்டனி பாக்கியராஜ் இயக்கியுள்ள சைரன், ராஜேஷ் இயக்கியுள்ள பிரதர், புதுமுக இயக்குநர் இயக்கும் ஜீனி உள்ளிட்ட படங்களைக் கைவசம் வைத்துள்ளார். மேலும் கமல் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் ‘தக் லைஃப்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கமிட்டாகியுள்ளார்.  கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காதலிக்க நேரமில்லை படத்தில் நடித்து வருகிறார். 

இதில் சைரன் படம் வருகிற 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஷ்வரன் நடித்திருக்க ஆண்டனி பாக்கியராஜ் இயக்கியுள்ளார். சுஜாதா விஜயகுமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். அண்மையில் ட்ரைலர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது. 

இந்த நிலையில் ஜெயம் ரவி தனது மனைவியுடன் திருப்பதி கோயிலில் தரிசனம் மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தனது அடுத்தடுத்த படங்களைப் பற்றி சொன்னார். மேலும் மணிரத்னம் - கமலின் தக் லைஃப் படம் மார்ச் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகத் தெரிவித்தார் பின்பு அவரிடம் விஜய்யின் அரசியல் வருகை குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த ஜெயம் ரவி, “கோயிலில் இருக்கேன். என் படத்தை பற்றி ஏதாவது கேள்வி இருந்தால் கேளுங்கள் சொல்கிறேன்” எனச் சொல்லிவிட்டு சென்றார்.