Skip to main content

கரோனா தடுப்பூசிக்கு பதிலாக வெறிநாய் கடிக்கான ஊசி - சுகாதார நிலையத்தின் அலட்சியம்!

Published on 10/04/2021 | Edited on 10/04/2021

 

vaccination

 

இந்தியாவில் கரோனாவைக் கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. தடுப்பூசி திருவிழா நடத்த பிரதமரும், மாநில முதல்வர்களுக்கு ஆலோசனை நடத்தியுள்ளார். இந்தநிலையில், கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள சென்றவர்களுக்கு வெறிநாய் கடிக்கான தடுப்பூசி செலுத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

உத்தரப்பிரதேச மாநிலம், ஷாம்லி மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட மூன்று பெண்மணிகள், கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள சமூக சுகாதார மையத்திற்குச் சென்றுள்ளனர். அங்கு அவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தப்பட்டதும் அவர்களது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சந்தேகமடைந்த அவர்கள், ‘ஆதார் கார்டை சமர்ப்பிக்க வேண்டுமா’ என கேட்டுள்ளனர். அப்போது தடுப்பூசி செலுத்திய மருந்தாளர் (pharmacist), ‘ஆதார் அட்டை தேவையில்லை. இது வெறிநாய் கடிக்கான தடுப்பூசி’ என கூறியுள்ளார்.

 

இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் சர்ச்சையாக வெடித்தது. இந்த சம்பவம் தொடர்பாக நடந்த விசாரணையில், கரோனா தடுப்பூசி போடுமிடத்திற்குச் செல்லாமல், வெளிப்புற நோயாளிகள் பிரிவுக்குச் சென்றது தெரியவந்தது. அதுநேரத்தில், அங்கு பணிபுரியும் மருந்தாளர், வேறொரு தனியார் மருந்தாளர் ஒருவரை அங்கு பணியில் அமர்த்திவிட்டு, வேறு ஒரு வேலைக்காக வெளியில் சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.

 

இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட குற்றவியல் நடுவர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவத்தின் விளைவாக ஒரு மருந்தாளர் இடைநீக்கமும், மற்றொரு மருந்தாளர் பணி நீக்கமும் செய்யப்பட்டுள்ளனர். சமூக சுகாதார மையத்தின் மேற்பார்வையாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காதலன் முகத்தில் ஆசிட் அடித்த காதலி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Girlfriend threw toilet cleaning liquid on her boyfriend face

உத்தரப் பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில் சிகிடாவுனி கிராமத்தை சேர்ந்தவர்  ராகேஷ் பிந்த்(26). இவரும் அதைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண்ணும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ராகேஷ் பிந்துக்கு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அப்போது  கழிவறை சுத்தம் செய்யும் திரவத்தோடு(ஆசிட்)  நிச்சயதார்த்தம் நடக்கும் இடத்திற்கு வந்த லட்சுமி தனது கையில் வைத்திருந்த திரவத்தை ராகேஷ் பிந்து முகத்தில் வீசினார். இதில் அவர் முகம் மற்றும் உடலில் உள்ள சில இடங்களில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதனிடையே அங்கிருந்தவர்கள் லட்சுமியைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். தன்னைக் காதலித்து விட்டு வேறொரு பெண்ணை நிச்சயதார்த்தம் செய்ததால் திரவத்தை வீசியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து லட்சுமியைக் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.