Skip to main content

ஜார்கண்டில் ஆட்சியை கவிழ்க்க பாஜக முயற்சி? - மூன்று பேர் கைது!

Published on 26/07/2021 | Edited on 26/07/2021

 

rahul hemant soren

 

ஜார்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம்.எம்), காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் தலைவர் ஹேமந்த் சோரன் முதல்வராக இருந்துவருகிறார். இந்தநிலையில், ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற்றுவரும் கூட்டணி ஆட்சியைக் கவிழ்க்க முயன்றதாக, மூன்று பேரை அம்மாநில காவல்துறை கைது செய்துள்ளது.

 

கைது செய்யப்பட்ட மூன்று பேரில், இரண்டு பேர் அரசு ஊழியர்கள் என்றும் அவர்களிடமிருந்து அதிகளவிலான பணம் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல் வெளியகியுள்ளது. மேலும் கைது செய்யப்பட்டவர்கள், ஜார்கண்டில் ஆட்சியைக் கவிழ்க்க சதி செய்ததை ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில், இந்த விவகாரத்திற்குப் பின்னணியில் பாஜக இருப்பதாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா குற்றஞ்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக பொதுச் செயலாளர் சுப்ரியா பட்டாச்சார்யா, "பாஜக, கர்நாடகா, மத்திய பிரதேஷ் மாடலை இங்கும் அமல்படுத்த முயற்சிக்கிறது. ஆனால் அதை செய்ய பாஜகவை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்" என கூறியுள்ளார்.

 

இதற்கிடையே கைது செய்யப்பட்ட நபர்களில் ஒருவரான நிவரன் பிரசாத் மகாடோவின் ஃபேஸ்புக் பக்கத்தில், அவர் பாஜக எம்.பி, உள்ளூர் பாஜக தலைவர்களுடன் இருப்பது போன்ற படங்கள் இடம்பெற்றுள்ளது குறித்து விளக்கமளித்துள்ள ஜார்கண்ட் பாஜகவின் செய்தி தொடர்பாளர், "எனக்கு தெரிந்த வரை நிவரன் பிரசாத் மகாடோ பாஜக உறுப்பினர் அல்ல" என கூறியுள்ளார். 

 

இந்தநிலையில், ஜார்கண்ட்டின் கோலேபிரா தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் நமன் பிக்சல் கொங்காரி, ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக மூன்று பேர் தன்னை பலமுறை அணுகியதாகவும், ஆட்சியைக் கவிழ்க்க தனக்கு ஒரு கோடி ரூபாய் பணமும், அமைச்சர் பதவியும் வழங்கப்படும் என அவர்கள் கூறியதாகவும் கூறியுள்ளார். மேலும் அவர்கள், இதை தாங்கள் பாஜகவிற்காக செய்வதாக தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.

 

ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக உங்களை அணுகியவர்கள்தான் கைது செய்யப்பட்டுள்ளார்களா என்ற கேள்விக்குப் பதிலளித்த நமன் பிக்சல் கொங்காரி, தன்னை அணுகியவர்களின் முகத்தை மறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வி பெறும்” - பா.ஜ.க அமைச்சரின் வைரல் பேச்சு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை (24-04-24) முடிவடைந்தது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியடையும் என்று பா.ஜ.க அமைச்சர் ஒருவர் பேசியது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பஜன் லால் ஷர்மா அமைச்சரவையில் மருத்துவத் துறை அமைச்சராக கஜேந்திர சிங் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க அமைச்சர் கஜேந்திர சிங் தனது ஆதரவாளர்களுடன் பேசியது தொடர்பாக வைரலான வீடியோவில், “முதற்கட்ட தேர்தலில் நாம் மோசமாக செயல்பட்டுள்ளோம். நாகௌர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியைத் தழுவும். நமது வாக்காளர்கள் வெளியே வரவில்லை. மற்ற இடங்களையும் இழக்கலாம்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இது பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.