''பாஜகவில் சேர்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்'' - புதுவை முதல்வர் நாராயணசாமி காட்டம்!!

narayasamy

புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், அம்மாநில அமைச்சருமான நமச்சிவாயம் காங்கிரஸ் தலைமை மீதான அதிருப்தி காரணமாக, கடந்த இரண்டு நாட்களாக தனது ஆதரவாளர்களுடன் தனியாக ஆலோசனை நடத்திவந்தார். இந்த நிலையில், நமச்சிவாயம் (வில்லியனூர் தொகுதி), தீப்பாய்ந்தான் (ஊசுடு தொகுதி) ஆகிய இருவரும் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர். இதற்கான கடிதத்தை அம்மாநில சட்டப்பேரவை சபாநாயகர் சிவக்கொழுந்துவிடம் வழங்கினர்.

புதுச்சேரியில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆளும் கட்சியைச் சேர்ந்த இரு எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தது, அம்மாநில காங்கிரஸ் கட்சியினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் புதுச்சேரி மாநில அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில்,பாஜகவில் சேர்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.''புதுச்சேரியிலும், தமிழகத்திலும்பாஜகவில் சேர்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள். அனைவரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்ற நிலையில்தான் நான் செயல்பட்டேன். ராஜினாமா செய்தவர்களின் சரித்திரம் பற்றி புதுச்சேரி மக்களுக்கு நன்றாகத் தெரியும். தேர்தல் நெருங்கும் போது இதுபோன்று நடக்கும் அதையும் சமாளித்து தேர்தலைகாங்கிரஸ் சந்திக்கும்''.என்றார்.

congress Narayanasamy Puducherry
இதையும் படியுங்கள்
Subscribe