Skip to main content

சபரிமலை தீர்ப்பு குறித்து நாளை கேரள முதல்வரை சந்திக்க இருக்கும் தேவசம் போர்டு தலைவர்....

Published on 29/09/2018 | Edited on 29/09/2018
sbari mala

சபரிமலைக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   

 
தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வில் நீதிபதி மல்ஹோத்ராவை தவிர 4 நீதிபதிகள் ஒருமித்து இந்த  தீர்ப்பை அளித்துள்ளனர்.  தீபக் மிஸ்ரா,  சந்திரசூட், கன்வில்கர், நரிமன் ஆகிய நீதிபதிகளைத்தவிர  நீதிபதி இந்து மல்ஹோத்ரா மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளார். சபரிமலையில் அனைத்துப்பெண்களையும் அனுமதிக்க மறுப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது.  உடல் மற்றும் உளவியல் ரீதியை காரணம் காட்டி பெண்களின் உரிமையை பறிக்கக்கூடாது.  ஐயப்ப பக்தர்கள் அனைவரும் இந்துகள்.  இதில் பாகுபாடு கூடாது.  தெய்வ வழிபாட்டில் பாரபட்சம் கூடாது.  வழிபாடு என்பது ஆண் - பெண் இருவருக்கும் சமமானது என்று கூறி   10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் சபரிமலைக்கு செல்ல தேவஸ்தானம் விதித்த தடையை உச்சநீதிமன்றம் நீக்கியது.
 

கேரளா மாநிலத்தில் உள்ள  சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு 48 நாட்கள்  விரதம் இருந்து இருமுடி கட்டி வரும் ஆண் பக்தர்களுக்கு அனுமதி உண்டு. பெண்களில் 10 வயதிற்கு மேல் 50 வயதுக்குட்டப்பட்டவர்கள் சபரிமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. 
 

மேலும், வயது வித்தியாசமின்றி 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்களையும் அனுமதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவ்வழக்கை உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. ‘சபரிமலையில் ஐயப்ப சாமியை தரிசனம் செய்ய பெண்களுக்கு சில கட்டுப்பாடுகள் உள்ளன. 10 வயது முதல் 50 வயது வரையுள்ள பெண்களால் 48 நாட்கள் விரதமிருக்க முடியாது என்பதால், அவர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவல்லை’ என தேவசம் போர்டு வழக்கறிஞர் சபரிமலை கோவிலில் பெண்களை அனுமதிக்க மறுப்பதற்கான காரணங்களை கூறி வாதிட்டார். இவ்வழக்கின் விசாரணை முடிந்து இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.   10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் சபரிமலைக்கு செல்ல தேவஸ்தானம் விதித்த தடையை உச்சநீதிமன்றம் நீக்கியது.   
 

இந்நிலையில், ”மற்ற மத தலைவர்களின் உதவியுடன் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வோம்” என்று திருவாங்கூர் தேவசம் அறக்கட்டளையின் தலைவர் பத்மகுமார் இந்த தீர்ப்பு குறித்து தெரிவித்துள்ளார்.
 

இன்று இதுகுறித்து கேரள தெவசம் போர்டின் அமைச்சர் பேசுகையில், ‘‘சபரிமலையில் பெண்களை அனுமதிக்கலாம் என்ற தீர்ப்பை கேரள அரசு வரவேற்கிறது. இந்த உத்தரவை தேவசம் போர்டு அமல்படுத்த வேண்டும். இந்த உத்தரவை அமல்படுத்துவதில் பல சிரமங்கள் ஏற்படும். சபரிமலையில் பெண்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் கருத்து வேறுபாடுகள் இருப்பதால், சமரசம் ஏற்படுத்த முயற்சிக்கப்படும்’’என்றார். மேலும் இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனை நாளை திருவாங்கூர் தலைவர் சந்திப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சார்ந்த செய்திகள்